Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உயிரை காக்க தன்னையே ஏலமிட்ட மகள்!
புற்றுநோயால் அவதிப்படும் தாயை காப்பாற்ற தன்னையே 3,50,000 யான்-க்கு (சீன பணம்) விற்க முன்வந்துள்ள சீன பெண்.
கற்பனை செய்து பார்க்கவே சற்று கடினமாக தான் இருக்கும். யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது என்பது தான் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்யும் விஷயம்.

இன்று யாருக்கு இந்த மனம் வரும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாயை காப்பாற்ற வேண்டும் என தன்னையே விற்க துணிந்துள்ளார் இந்த சீன பெண்.
பதின் வயது பெண்!
19 வயதே நிரம்பிய இந்த சீனத்து பெண், தாயை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற சீன பணத்தில் 3,50,000 யான் தேவைப்படுவதால், அதை திரட்ட, தன்னை தானே விற்க முன்வந்த செய்தி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தவறான வழிநடத்தப்பட்ட பெண்!
புற்று நோய் சிகிச்சைக்கு அதிகளவில் பணம் அவசரமாக தேவைப்படுவதால், தவறாக வழிநடத்தப்பட்ட சாவோ மெங்கியான் எனும் இந்த சீன பெண், தன்னை தானே விற்க முன்வந்துள்ளார்.

ஆன்லைன் ஏலம்!
தன்னை யார் வேண்டுமானால் 40 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். தனது தாயின் மருத்துவ செலவிற்காக என்னை நான் விற்கிறேன் என இவர் ஆன்லைன் ஏலத்தில் விற்க முனைந்தார்.

பரிதாபம்!
"என்னை நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஏலத்தில் எடுக்கவும். இதனால் என் தாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும்."
"நீங்கள் பணத்தை கொடுத்த அடுத்து, நாம் உங்களுக்காக எந்த வேலையும் செய்ய தயாராக உள்ளேன்."
"என்னை வாங்கும் நபர் என்ன வேலை செய்ய கூறினாலும், நான் மறுக்காமல் செய்வேன், என் வாக்கை நான் ஏமாற்ற மாட்டேன்."
என பரிதாபமாக கூறியுள்ளார்.

தாராள மனம்!
சமூக ஊடகங்களில் இது பரவியது. இதை கண்ட பலரும் பரிதாபமும், விரக்தியும் அடைந்தனர். கடைசியில், ஒரு தாராள மனம் கொண்ட நபர் ஒருவர், அந்த பெண்ணின் தாயின் மருத்துவ செலவுகளை முழுவதும் ஏற்று மருத்துவமனை பில்களை செலுத்தியதா கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
