Latest Updates
-
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் டாப் 3 கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உயிரை காக்க தன்னையே ஏலமிட்ட மகள்!
புற்றுநோயால் அவதிப்படும் தாயை காப்பாற்ற தன்னையே 3,50,000 யான்-க்கு (சீன பணம்) விற்க முன்வந்துள்ள சீன பெண்.
கற்பனை செய்து பார்க்கவே சற்று கடினமாக தான் இருக்கும். யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது என்பது தான் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்யும் விஷயம்.

இன்று யாருக்கு இந்த மனம் வரும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாயை காப்பாற்ற வேண்டும் என தன்னையே விற்க துணிந்துள்ளார் இந்த சீன பெண்.
பதின் வயது பெண்!
19 வயதே நிரம்பிய இந்த சீனத்து பெண், தாயை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற சீன பணத்தில் 3,50,000 யான் தேவைப்படுவதால், அதை திரட்ட, தன்னை தானே விற்க முன்வந்த செய்தி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தவறான வழிநடத்தப்பட்ட பெண்!
புற்று நோய் சிகிச்சைக்கு அதிகளவில் பணம் அவசரமாக தேவைப்படுவதால், தவறாக வழிநடத்தப்பட்ட சாவோ மெங்கியான் எனும் இந்த சீன பெண், தன்னை தானே விற்க முன்வந்துள்ளார்.

ஆன்லைன் ஏலம்!
தன்னை யார் வேண்டுமானால் 40 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். தனது தாயின் மருத்துவ செலவிற்காக என்னை நான் விற்கிறேன் என இவர் ஆன்லைன் ஏலத்தில் விற்க முனைந்தார்.

பரிதாபம்!
"என்னை நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஏலத்தில் எடுக்கவும். இதனால் என் தாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும்."
"நீங்கள் பணத்தை கொடுத்த அடுத்து, நாம் உங்களுக்காக எந்த வேலையும் செய்ய தயாராக உள்ளேன்."
"என்னை வாங்கும் நபர் என்ன வேலை செய்ய கூறினாலும், நான் மறுக்காமல் செய்வேன், என் வாக்கை நான் ஏமாற்ற மாட்டேன்."
என பரிதாபமாக கூறியுள்ளார்.

தாராள மனம்!
சமூக ஊடகங்களில் இது பரவியது. இதை கண்ட பலரும் பரிதாபமும், விரக்தியும் அடைந்தனர். கடைசியில், ஒரு தாராள மனம் கொண்ட நபர் ஒருவர், அந்த பெண்ணின் தாயின் மருத்துவ செலவுகளை முழுவதும் ஏற்று மருத்துவமனை பில்களை செலுத்தியதா கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications