Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
இறந்த காதலி நினைவாக, பாம்புடன் குடித்தனம் நடத்தி வரும் இளைஞர்!
தனது இறந்த காதலி தான், பாம்பாக வந்திருக்கிறார் என நம்பி, பாம்புடன் குடித்தனும் நடத்தி வரும் இளைஞர் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
80-களில் ஒருசில தமிழ் சினிமாக்களில் இதை நாம் திரையில் கண்டுள்ளோம். பாம்பு காதலர்களை ஹீரோ கூட்டம் பிரித்துவிடும். அதற்காக பழிவாங்க பெண் பாம்பு அல்லது ஆண் பாம்பு மனித உருவெடுத்து ஏதோ ஒரு பௌர்ணமி, அமாவாசைக்காக காத்திருந்து வரும்.

ஆனால் இங்கே, ஒரு இளைஞர் இறந்த தனது காதலியே பாம்பு உருவத்தில் வந்திருக்கிறார் என நம்பி பாம்புடன் குடித்தனம் நடத்தி வருகிறார்.

ஐந்து வருடங்கள்!
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவரது காதலி இறந்துவிட்டார். இது இவரது வாழ்வில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

ஒற்றுமை!
பிறகு ஒரு நாள், இந்த இளைஞர் இந்த பாம்பை, ஒரு இடத்தில் கண்டுள்ளார். பாம்பு பார்க்க தன் காதலியுடன் ஒற்றுமை உள்ளது போன்று காட்சியளிக்க, இறந்த காதலி தான் பாம்பு ரூபத்தில் வந்திருக்கிறது என நம்பி வாழ்ந்து வருகிறார்.

பத்து அடி பாம்பு!
பத்து அடி நீளம் உள்ள பாம்பை தன் காதலி என நம்பி இவர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். புத்த மதத்தில் இறந்தவர்கள் விலங்குகள் உருவில் வருவார்கள் என கூறுவதை இவர் பின்பற்றி வருகிறாராம்.

செயல்கள்!
பாம்புடன் விளையாடுகிறார், டின்னர் சாப்பிடுகிறார், விளையாடுகிறார், ஏன் இருவரும் ஒன்றாக தான் உறங்குகிறார்கள் என்றால் பாருங்களேன். அந்த பாம்பும் இவரை ஒன்றும் செய்யாமல், இவருடன் வாழ்ந்து வருகிறது என்பது தான் வியப்பை அளிக்கிறது.

காதலுக்கு கண்ணில்லை!
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இந்த இளைஞர் விஷயத்தில் காதலுக்கு அச்சம், பயம் கூட இல்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. பாம்பை எட்டி நின்று பார்க்கவே அஞ்சும் மக்களிடம், காதலியின் நினைவுகள் கொண்டு, ஒன்றாக வாழ்ந்து வருகிறார் இந்த இளைஞர்.



Click it and Unblock the Notifications