Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
இறந்த காதலி நினைவாக, பாம்புடன் குடித்தனம் நடத்தி வரும் இளைஞர்!
தனது இறந்த காதலி தான், பாம்பாக வந்திருக்கிறார் என நம்பி, பாம்புடன் குடித்தனும் நடத்தி வரும் இளைஞர் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
80-களில் ஒருசில தமிழ் சினிமாக்களில் இதை நாம் திரையில் கண்டுள்ளோம். பாம்பு காதலர்களை ஹீரோ கூட்டம் பிரித்துவிடும். அதற்காக பழிவாங்க பெண் பாம்பு அல்லது ஆண் பாம்பு மனித உருவெடுத்து ஏதோ ஒரு பௌர்ணமி, அமாவாசைக்காக காத்திருந்து வரும்.

ஆனால் இங்கே, ஒரு இளைஞர் இறந்த தனது காதலியே பாம்பு உருவத்தில் வந்திருக்கிறார் என நம்பி பாம்புடன் குடித்தனம் நடத்தி வருகிறார்.

ஐந்து வருடங்கள்!
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவரது காதலி இறந்துவிட்டார். இது இவரது வாழ்வில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

ஒற்றுமை!
பிறகு ஒரு நாள், இந்த இளைஞர் இந்த பாம்பை, ஒரு இடத்தில் கண்டுள்ளார். பாம்பு பார்க்க தன் காதலியுடன் ஒற்றுமை உள்ளது போன்று காட்சியளிக்க, இறந்த காதலி தான் பாம்பு ரூபத்தில் வந்திருக்கிறது என நம்பி வாழ்ந்து வருகிறார்.

பத்து அடி பாம்பு!
பத்து அடி நீளம் உள்ள பாம்பை தன் காதலி என நம்பி இவர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். புத்த மதத்தில் இறந்தவர்கள் விலங்குகள் உருவில் வருவார்கள் என கூறுவதை இவர் பின்பற்றி வருகிறாராம்.

செயல்கள்!
பாம்புடன் விளையாடுகிறார், டின்னர் சாப்பிடுகிறார், விளையாடுகிறார், ஏன் இருவரும் ஒன்றாக தான் உறங்குகிறார்கள் என்றால் பாருங்களேன். அந்த பாம்பும் இவரை ஒன்றும் செய்யாமல், இவருடன் வாழ்ந்து வருகிறது என்பது தான் வியப்பை அளிக்கிறது.

காதலுக்கு கண்ணில்லை!
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இந்த இளைஞர் விஷயத்தில் காதலுக்கு அச்சம், பயம் கூட இல்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. பாம்பை எட்டி நின்று பார்க்கவே அஞ்சும் மக்களிடம், காதலியின் நினைவுகள் கொண்டு, ஒன்றாக வாழ்ந்து வருகிறார் இந்த இளைஞர்.



Click it and Unblock the Notifications











