Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
விந்தணுவிற்காக ஓர் ஆண் மகனை கடத்தி கற்பழித்த மூன்று இளம் பெண்கள் - அதிர்ச்சி!!!
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் கற்பழிப்பு குற்றங்கள் பல கடுமையான சட்டங்கள் இருந்தும் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக மூன்று பெண்கள் சேர்ந்து ஓர் ஆணை கற்பழித்துள்ளனர். அதுவும் அவனது விந்தணுவிற்காக.
இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!
காலம் கெட்டுப் போகும் என்று தெரியும். ஆனால், இவ்வளவு கெட்டுப் போகும் என்று தெரியவில்லை. சம உரிமை என்பதை தவறாக எடுத்துக் கொண்டனரோ என்னவோ. ஆனாலும், இந்த சம்பவம் உலக அளவில் பெரும் புயலை கிளப்பிவிட்டுள்ளது.
மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பிரசவித்த அதிசயம்!!!
இது வெறும் கற்பழிப்பு குற்றம் மட்டும் அல்ல, ஒரு வகையான திருட்டும் கூட. ஆம், அவர்கள் அந்த ஆணை கற்பழித்ததே அவனது விந்தணுவை திருடுவதற்காக தான் என்பது தெரியவந்துள்ளது. இது மட்டுமல்ல இந்த சம்பவத்தின் பின்னணியில் பல அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவந்துள்ளன...

தென் ஆப்ரிக்காவில்
ஓர் ஆணை, விந்தணுவிற்காக மூன்று பெண்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் தென் ஆப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் என்னும் இடத்தில் நடந்ததுள்ளது.

வழி கேட்டு அழைத்துள்ளனர்
கருப்பு நிற பி.எம்.டபிள்யூ காரில் வந்த மூன்று பெண்கள் 33 வயதான ஓர் ஆணை (பெயர் வெளியிடவில்லை) தங்களுக்கு வழி காண்பிக்கும் படி கேட்டு அழைத்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் கடத்தல்
வழிக் காட்டியபடி காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது ஓர் பெண் திடீரென துப்பாக்கியை காட்டி அந்த ஆணை மிரட்டியுள்ளார்.

500 கிலோமீட்டர் தூரம் கடத்தல்
அந்த மூன்று பெண்களும் சேர்ந்து அந்த ஆணை தங்களது காரின் மூலம் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் கடத்தி சென்றுள்ளனர்.

உசுப்பிவிடபட்டுள்ளார்
காரில் சென்றுக் கொண்டிருக்கும் போதே அந்த ஆண் உச்சம் அடைவதற்காக உசுப்பிவிட்டுள்ளனர். ஆனால், அந்த ஆண் மசியவில்லை.

கட்டாயப்படுத்தியுள்ளனர்
அவர் மசியவில்லை என்றதும் அவரை கட்டாயப்படுத்தி, என்னவென்று கூறாமல் ஓர் பானத்தை குடிக்க வைத்துள்ளனர்.

பலமுறை பலாத்காரம்
அதன் பிறகு, மூன்று பெண்களும் சேர்ந்து அந்த ஆணை பல முறை கற்பழிக்கபட்டதாக கூறப்படுகிறது.

விந்தணுவிக்காக கடத்தல்
பிறகு அவரது விந்தணுவை ஓர் பிளாஸ்டிக் பையில் சேகரித்துள்ளனர். அதை ஓர் கையடக்க குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தூக்கியெறியப்பட்டார்...
இவை யாவும் நடந்த பிறகு, மூன்று பெண்களும் சேர்ந்து அந்த நபரை எங்கிருந்து காரில் எற்றினார்களோ, அங்கேயே காரில் இருந்து தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிட்டனர்.

இது முதல் முறை கிடையாது
இதற்கு முன்பே ஒரு முறை தென்ஆப்ரிக்காவின், குவாடென்க் (Gauteng) என்னும் இடத்தில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், அந்த வழக்கின் சார்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதிர்ச்சி
ஆண்களின் விந்தணுவை திருடுவதற்காக ஓர் கும்பல் இவ்வாறு செயல்பட்டு வருகிறதா? என்று அங்கு சந்தேகிக்கப்படுகிறது.

விந்தணு மதிப்பு
நாம் இரத்த தானம் செய்வது போல தான், இப்போது விந்தணு தானமும் செய்யப்படுகிறது. முன்பு எப்படி இரத்தம் தானம் செய்தால் பணம் கிடைக்கிமோ, அதைவிட பல மடங்கு பணம் விந்தணு தானத்தில் கிடைக்கின்றது. இதற்காக தான் புதிதாக ஓர் கும்பல் விந்தணு திருட்டில் இறங்கியுள்ளது.



Click it and Unblock the Notifications











