முதன்மைக் கடவுளான விநாயகரின் எட்டு அவதாரங்கள்!!!

By Ashok CR

விநாயகரை வக்ரதுண்டா, லம்போதரா, கஜனன் என பல பெயர்களை கொண்டு அழைக்கின்றோம். இந்தியாவின் உள்ள பல இடங்களில், இவையனைத்தும் அவரை வழிபடும் பல்வேறு வடிவங்களாகும். விநாயகரின் வடிவங்கள் பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகிறது. விநாயக புராணத்தின் படி, விநாயகர் நான்கு வடிவங்களை கொண்டுள்ளார் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தை குறிக்கும். இருப்பினும் அவர் எட்டு வடிவங்களை கொண்டுள்ளார் என்றும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட விசேஷம் உள்ளதென்றும் முட்கல புராணம் கூறுகிறது.

எட்டு வடிவிலான விநாயகருக்கு வெவ்வேறு விசேஷங்கள் உள்ளது. ஒவ்வொரு வடிவத்திலும் சரும நிறம், வாகனம் அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பொருட்கள் என அனைத்துமே வேறுபட்டிருக்கும். விநாயகரின் இந்த ஒவ்வொரு வடிவத்திற்கும் என்ன காரணம்? - அசுரர்கள் அல்லது நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதற்கு, விநாயகரின் இந்த எட்டு வடிவமும் ஒவ்வொரு குணங்களை எடுத்துரைக்கும். ஆனால் இந்த ஒவ்வொரு வடிவத்திற்கான அடிப்படை காரணம் ஒன்றாக தான் இருக்கும்.

விநாயகரின் அந்த எட்டு வடிவங்களை பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வக்ரதுண்டா

வக்ரதுண்டா

விநாயகரின் முதல் வடிவம் இது. வக்ரதுண்டா என்றால் வளைந்த தும்பிக்கை என்று அர்த்தமாகும். மட்சர்யசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை எடுத்தார் விநாயகர். மட்சர்யசுரா என்றால் மனிதர்களில் உள்ள பொறாமை குணத்தை குறிக்கும். அதனால் பொறாமையை எதிர்கொண்டு வெற்றியை ஈட்டியதை இந்த வடிவம் குறிக்கும். இந்த அவதாரத்திற்கு அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.

ஏகடண்டா

ஏகடண்டா

ஏகடண்டா என்றால் ஒற்றை தந்தம் என்று பொருளாகும். மடசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை விநாயகர் எடுத்தார். சக்தி மற்றும் இதர காரணங்களால் மனிதர்களின் மனதில் குடிபுகும் நஞ்சை குறிக்கும் மடசுரா. மனிதர்களின் மனதில் உள்ள நஞ்சை நீக்கி வெற்றி பெற ஏகடண்டா பிறந்தார். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

மகோதரா

மகோதரா

விநாயகரின் மூன்றாவது வடிவம் பெரிய தொந்தியை குறிக்கும். எண்ணமயக்கத்தின் அரக்கனான மோஹசுராவை கொல்வதர்காகாவே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. அறியாமையை ஒழித்து எதிர்மறையான எண்ணங்களை அழித்திடவே இந்த வடிவம் எடுக்கப்பட்டது. இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

கஜானன்

கஜானன்

கஜானன் என்றால் யானை முகத்தினை குறிக்கும். இந்த வடிவம் பேராசையின் அரக்கனை அழிக்கும். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

லம்போதரா

லம்போதரா

விநாயகரின் ஐந்தாவது வடிவம் இது. லம்போதர என்றால் பானை தொந்தியை கொண்டவர் ஆகும். லம்போதரா வடிவத்தில் இருக்கும் விநாயகர் கோபத்தின் அசுரனான க்ரோதாவை அழித்தார். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

விகடா

விகடா

விகடா என்றால் எப்போதும் இல்லாததை போன்ற வடிவமாகும். காம வெறி அரக்கனை அழிக்கவே இந்த அவதாரம். இந்த அவதாரத்தில் மயிலின் மீது அவர் அமர்ந்திருப்பார்.

விக்னராஜா

விக்னராஜா

ஈகோவின் அரக்கனான மாமாவை அழிக்க விநாயகர் இந்த அவதாரத்தை எடுத்தார். விக்னராஜா என்றால் தங்களை நீக்குபவர் என்று பொருளாகும். இவர் சேஷா என்ற நாகத்தின் மீது அமர்ந்திருப்பார்.

தும்ரவர்ணா

தும்ரவர்ணா

இது தான் விநாயகரின் எட்டாவது அவதாரமாகும். தும்ரவர்ணா என்றால் 'புகை நிறம்' என்று அர்த்தமாகும். ஆணவ அரக்கனான அபிமனராசுவை அழிக்கவே அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion