Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவம்!
ஸ்வஸ்திகா என்பது ஒவ்வொரு இந்து வீட்டிலும் காணப்படும் ஒரு பொதுவான சின்னமாகும். இந்துக்களின் அனைத்து மங்களகரமான நிகழ்வுகளிலும் இந்த சின்னம் கண்டிப்பாக இடம் பெறும். ரங்கோலி வடிவிலோ அல்லது கலசத்திலோ அல்லது வீட்டின் கதவுகளிலோ அது வரையப்பட்டிருக்கும்.
ஸ்வஸ்திகா எனும் வார்த்தை 'சு' (மங்களகரம் என பொருள் தரும்) மற்றும் 'அஸ்தி' (இருக்கும் என பொருள் தரும்) என்ற இரண்டு அசைகளால் உருவானவை. இரண்டையும் சேர்த்தால் ஸ்வஸ்திகா என்பதற்கு 'மங்களகரம் உங்கள் உடனிருக்கும்' என பொருள் தரும். சக்தி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை குறிக்கும் சின்னமாக ஸ்வஸ்திகா பார்க்கப்படுகிறது. இந்த மங்களகரமான சின்னம் இந்தியாவில் மட்டும் புகழோடு விளங்காமல், மற்ற பல நாடுகளிலும் கூட புகழோடு விளங்குகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஜெர்மனி நாசி படையின் சின்னமே இந்த ஸ்வஸ்திகா தான். அதே போல் தாய்லாந்து நாட்டு மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஸ்வஸ்திகா சின்னத்தை பயன்படுத்துகின்றனர்.
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
ஸ்வஸ்திகா சின்னத்தில் குறுக்கு கோடுகள் நான்கினை காணலாம். இது நான்கு திசைகளை குறிக்கிறது. இது புருஷர்தா எனப்படும் மனிதர்களின் அடிப்படை ஆசைகளை குறிக்கவும் செய்கிறது. தர்மா (கட்டளை), அர்தா (செல்வம்), காமா (காமம்) மற்றும் மோக்ஷா (மோட்சம்) ஆகியவைகள் தான் அந்த நான்கு ஆசைகள். இந்த சின்னத்திற்கு பல விதத்தில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போது பார்க்கலாமா?
செல்வம் மற்றும் வளமையின் சின்னம்
ஸ்வஸ்திகா சின்னத்தின் இடது பக்கம் விநாயகர் வசிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஸ்வஸ்திகா என்பது கடவுள்கள் வசிக்கும் இடமாக நம்பப்படுகிறது. ஸ்வஸ்திகா வரையப்பட்டிருக்கும் இடத்தில் செல்வமும், வளமையும் குடி கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும்
சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை ஸ்வஸ்திகா அழிக்கும் என கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஸ்வஸ்திகா என்பது ஒரு வீட்டில் இருக்க வேண்டிய நல்ல சின்னமாம். இது உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வரும்.
ஜெயின் மதத்தில் ஸ்வஸ்திகா
ஜெயின் மதத்தினரும் ஸ்வஸ்திகாவை நல்ல அதிர்ஷ்டத்தை தரும் சின்னமாக கருதுகின்றனர். ஜெயின் மதத்தை சேர்ந்த 24 தீர்த்தன்கராக்களும் ஸ்வஸ்திகாவை தங்களின் சின்னமாக வைத்துள்ளனர்.
முக்கியத்துவம்
பழங்காலத்தில் இருந்தே ஸ்வஸ்திகா என்பது வளத்தை கொண்டு வரும் சின்னமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் உங்கள் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால், தலைவாசல் கதவின் இரண்டு பக்கமும் இரண்டு ஸ்வஸ்திகா பிரமிடுகளை வைத்தால் அந்த தோஷம் நீங்குமாம். பணப்பெட்டகம் மற்றும் வணிக கணக்கு புத்தகங்களிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்திருந்தால் அது அதிக பொன்னையும் பொருளையும் ஈட்டி தரும்.
அதனால், ஸ்வஸ்திகா என்பது இந்து மதத்தில் மட்டுமல்லாது மற்ற பண்பாடுகளிலும் முக்கிய சின்னமாக திகழ்கிறது.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...