கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Krishna Jayanthi 2024: இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணர் அவதாரமாகும்.

தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே பகவான் கிருஷ்ணர், அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

Krishna jayanthi 2024 here the full details of dos and donts for abserving viratham janmashtami 2024

கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது?

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம். இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ம் தேதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.

அதற்காக விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.. முந்தைய நாள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.. பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக உங்கள் உணவில் சரியான ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது முக்கியம். இது உங்களை நீரேற்றமாகவும், ஊட்டச்சத்துக்களால் பலப்படுத்தி வைத்திருக்கும். அப்படி செய்வதினால் உங்களுக்கு மயக்கம் சோர்வு ஏற்படாமல் ஆரோக்கியமாக புத்துணர்வுடன் இருப்பீர்கள்..

அதன் பிறகு விரதம் இருக்கும் கிரஷ்ண ஜெயந்தி அன்று அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.. நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பது முக்கியம். திட உணவுகள் சாப்பிடாமல் இருப்பது சரி. ஆனால் அதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். இது உங்களை சோர்வடையாமல், அதே நேரம் அசிடிட்டி, வீக்கம், மலச்சிக்கல் போன்ற அசௌகரியங்களைத் தடுக்கிறது.

மேலும் உங்கள் உடலையும் மனதையும் குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்... பல கோட்பாடுகளின்படி, வெங்காயம் மற்றும் பூண்டு இயற்கையில் 'தாம்சிக்' மற்றும் உடலில் சரீர சக்தியை உள்ளடக்கியது, வெப்பத்தை உருவாக்குகிறது. அதனால் முந்தின நாள் மற்றும் அடுத்த நாள் இந்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது..

அத்துடன் மசாலா கலந்த உணவிகளை தவிர்க்க வேண்டும்.. ஒவ்வொரு மசாலாவும் நம் உடலில் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் ஊட்டச்சத்துக்களுடன் வருகிறது. சில மசாலாப் பொருட்கள் உடலில் வெப்பத்தைத் தூண்டினாலும், சில நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வீக்கம் மற்றும் அசௌகரியத்தின் அபாயங்களைத் தடுக்கக்கூடிய குளிர்ச்சியான மசாலாக்களான கருப்பு மிளகு மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்களை தங்கள் விரத உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

பக்தர்கள் நள்ளிரவு வரை விழித்திருந்து கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுவார்கள்.. அதனால் உடலில் எந்த வித அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க, அதை லேசாக வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு லேசான உணவை உண்பதும் நீண்ட நேரம் விழித்திருக்க உதவும்.. ஆனால் அதற்கு பதிலாக அதிகமான காபி , அல்லது டீயை அருந்துவது நல்லதல்ல..

Desktop Bottom Promotion