Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Jupiter Venus Conjunction In Taurus 2024: ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டின் மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் இருந்து பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. ஏனெனில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே மாதத்தின் தொடக்கத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார்.
ரிஷப ராசியானது சுக்கிரனின் ராசியாகும். சுக்கிரனும், குருவும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த குரு பெயர்ச்சியானது நற்பலன்களை அளிக்கும். இதுவும் இந்த மே மாதத்தில் ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனும் இந்த ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், எதிர்பாராத அளவில் லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் ரிஷப ராசியில் நிகழும் குரு சுக்கிர சேர்க்கையால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திட்டமிட்ட வேலைகளும் பிரச்சனைகளின்றி முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாடு சென்று படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











