Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
குரு-ராகு சேர்க்கை முடிவு: அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Jupiter Rahu Conjunction End On October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே தெரியும்.
அந்த வகையில் தேவகுருவான குரு பகவான் தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் அந்த ராசியில் தான் நிழல் கிரகமான ராகுவும் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் ராகு மற்றும் குருவின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மேஷ ராசியில் இருந்து குருபகவானின் ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறார். இதனால் ராகு-குரு சேர்க்கை அக்டோபர் 30 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
ஆகவே இதுவரை குரு ராகு சேர்க்கையால் தொழிலில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், அக்டோபர் 30 முதல் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். சொல்லப்போனால், அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 30 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக திடீர் பண ஆதாயம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 முதல் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், அக்டோபர் முதல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். தங்க வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இதுவரை தங்கள் வாழ்க்கையில் தடைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்திருந்தால், அக்டோபர் 30 முதல் அப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கை சூப்பராக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











