Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
100 ஆண்டுகளுக்கு பின் குரு உருவாக்கிய விபரீத ராஜயோகம்: இன்னும் 1 ஆண்டில் இந்த 3 ராசிக்காரங்க பணக்காரர் ஆகலாம்!
Vipreet Rajyog 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. அப்படி உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தேவர்களின் குருவான குரு பகவான் மே 01 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்ததனால், எதிர் ராஜயோகம்ன விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, சிலருக்கு பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. இப்போது குரு உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குருவின் அருளால் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெறுவார்கள்.
தனுசு
தனசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு ஆண்டு காலம் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக பணம் சிக்கியிருந்தால், அது கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். முதலீடுகளை செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் அடைவார்கள். மேலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். முக்கியமாக குருவின் அருளால் புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, பணக்காரராகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications