Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
பெண்களுக்கு கொஞ்சமும் பாதுகாப்பு இல்லாத டாப் 10 நாடுகள் இதுதான்...இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
International Women's Day 2024: தற்போது வேகமாக வளர்ந்து வரும் உலகில் பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்வதை சாகசமாக நினைக்கின்றனர். உலகம் முழுக்க பெண்கள் தனியாக பயணம் செய்வதை எண்ணற்ற வீடியோக்களில் YouTube-ல் பார்க்கிறோம். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய மற்றும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
துரதிர்ஷ்டவசமாக, அனைத்து இடங்களும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருந்து விடுவதில்லை. சமீபத்தில் பிரேசிலை சேர்ந்த பெண் பயணியை ஜார்கண்ட்-ல் சில சமூக விரோதிகள் வன்புணர்வு செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி நமது பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் சிறுமி ஆர்த்தி-க்கு நேர்ந்திருக்கும் கொடூரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. நமது சமூகம் எந்த பாதையில் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் இந்த சம்பவங்கள் எழுப்புகிறது.
நல்லவர்கள் மட்டுமே உள்ள இடம் என்று இந்த உலகத்தில் எந்த இடமும் இல்லை. எனவே பெண்கள் தங்கள் பயணத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சில நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதால் அங்கு பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கும் டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
தென் ஆப்பிரிக்கா
நீங்கள் தனியாகப் பயணிக்கும் பெண்ணாகவோ அல்லது உங்கள் துணையுடன் மட்டும் பயணிப்பவராக இருந்தால், தென்னாப்பிரிக்கா உங்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற அல்லது ஆபத்தான நாடாகும். இந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை பதிவுகள் மிக அதிகமாக உள்ளன, மேலும் வெறும் 25% பெண்கள் மட்டுமே இந்த நாட்டில் இரவில் தனியாக செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த நாட்டில் 40% க்கும் அதிகமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் கற்பழிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெண்களை வேண்டுமென்றே படுகொலை செய்வதில், தென் ஆப்பிரிக்கா மிக மோசமான தரவரிசையில் உள்ளது.
பிரேசில்
பெண்கள் பாதுகாப்பில் மோசமான நாடுகளில் இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. பெண்களுக்கு எதிரான ஆணவக் கொலைகளின் அடிப்படையிலான கணக்கெடுப்பில் இந்த நாடு மூன்றாவது அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்கு 28% பெண்கள் மட்டுமே இரவில் தனியாக தெருக்களில் நடக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள். 36.9% பெண்கள் தங்கள் துணையிடமிருந்து பாலியல் அல்லது உடல்ரீதியான வன்முறையை அனுபவிப்பதால் இந்த நாடு பெண்களுக்கான ஒட்டுமொத்த பாதுகாப்பில் ஆறாவது இடத்தில் உள்ளது.
ரஷ்யா
பெண்களுக்கு எதிரான படுகொலை சம்பவங்களில் ரஷ்யா இரண்டாவது மிக உயர்ந்த விகிதத்தில் இந்தஉள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்த நாடு மூன்றாவது இடத்தைப் பெறுவதற்கு இந்த தரவரிசை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அவர்களின் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும்.
மெக்ஸிகோ
மெக்ஸிகோவில் 33% பெண்கள் மட்டுமே இரவில் வெளியே செல்வது பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த சதவீதத்தால், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான வேண்டுமென்றே நடத்தப்படும் கொலைகள் பட்டியலிலும் இது நான்காவது இடத்தில் உள்ளது. கணவர் அல்லாத பாலியல் வன்முறையின் அடிப்படையில், மெக்ஸிகோ மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஈரான்
பாலின இடைவெளிகள் அதிகமிருப்பதன் அடிப்படையில் ஈரான் முதலிடத்தில் உள்ளது, இது பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அரசியல் அதிகாரம், சுகாதாரம், பெண் கல்வி மற்றும் பொருளாதார பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகளை இந்தக் குறியீடு கண்காணிக்கிறது. பெண்களுக்கு எதிரான சட்டரீதியான பாகுபாடுகளில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஈரான் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
டொமினிக்கன் குடியரசு
கரீபியனில் உள்ள இந்த நாடு பெண்களுக்கு எதிரான படுகொலைகளில் ஐந்தாவது அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது. சுமார் 33% பெண்கள் இரவில் தெருவில் நடக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர். உடல்நலம், பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் சந்தை ஆகியவற்றால் அளவிடப்படும் பாலின வேறுபாட்டின் அடிப்படையில், டொமினிக்கன் குடியரசு ஆறாவது இடத்தில் உள்ளது.
எகிப்து
பெண் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற இடமாக ஏழாவது இடத்தில் எகிப்து உள்ளது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில், எகிப்து ஆறாவது இடத்தில் உள்ளது. எகிப்து பாலின சமத்துவமின்மையின் ஏழாவது மிக உயர்ந்த நிலை மற்றும் உலகின் நான்காவது மிக உயர்ந்த பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது.
மொரோக்கோ
ஏறத்தாழ 45% மொராக்கோ பெண்கள், அவர்களின் கணவரால் உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கின்றனர். ஏறக்குறைய 32% பெண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்கத்தக்கவை என்று ஒப்புக்கொள்கிறார்கள். இதனாலேயே பெண்களுக்கான பாதுகாப்பற்ற நாடுகளில் இது எட்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா
37.2% பெண்கள் இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். பாலின சமத்துவமின்மையை அளவிடும் குறியீட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியப் பெண்களின் கணக்கெடுப்பில் 45% பெண்கள், சில சூழ்நிலைகளில், ஒருவரின் மனைவி அல்லது துணையை அடிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நம்புகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பெண்களுக்கு எதிராக 52 குற்றங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதனாலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
தாய்லாந்து
தாய்லாந்தில் 44% பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். கூடுதலாக 50 நாடுகளில் உள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 61% பெண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை நியாயப்படுத்தப்படலாம் என்று கூறினர். இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இது பத்தாவது இடத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications













