Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ஆங்கிலேயர்களால் நுழையவே முடியாத இந்திய மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? அந்த மாநிலங்களின் கதி என்னவானது தெரியுமா?
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்பது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான வரலாறாகும், மேலும் அதன் விளைவுகள் சுதந்திரத்திற்குப் பிறகும் பல தசாப்தங்களுக்கு நீடித்தது. இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்கள் என்றே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை நாம் குறிப்பிடலாம். பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியாவுக்கு சில நன்மைகள் கிடைத்தாலும் அதற்காக இந்தியா கொடுத்த விலை மிகவும் பெரியது.
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் கலாச்சார, சமூக, படைப்பாற்றல், கலை மற்றும் பொருளாதார செழுமை ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டன. இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது, அது பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இல்லாத சில மாநிலங்கள் சுதேச அரசுகளாகவோ அல்லது பிரெஞ்சு, போர்த்துகீசியம் மற்றும் டச்சு போன்ற பிற காலனித்துவ சக்திகளின் கீழ் இருந்த அரசுகளாகவோ இருந்தன.

சுதேச அரசுகள்
சுதேச அரசுகள் பெரும்பாலும் இந்திய அரசுகள் என்றும் குறிப்பிடப்பட்டன. சுதேச அரசுகளில் ஜம்மு & காஷ்மீர், ஹைதராபாத் மாநிலம், கலாத், ஜோத்பூர் அரசு, மைசூர் அரசு, குவாலியர் அரசு, பிகானர் அரசு, ஜெய்சால்மர் அரசு, ஜெய்ப்பூர் அரசு, பஸ்தர் அரசு மற்றும் பல சிற்றரசுகள் அடங்கும். இந்த அரசுகள் பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. அவை அந்தந்த இராஜ்ஜியத்தின் மன்னர்களால் ஆளப்பட்டன, ஆனால் அவை துணை அரசுக் கூட்டணிக்கு உட்பட்டதால் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவில்லை.
துணை அரசு
துணை அரசு கூட்டணி என்பது கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையிலான ஒரு உடன்படிக்கை ஆகும். துணை அரசுக் கூட்டணியின் படி, கிழக்கிந்திய நிறுவனம் இந்திய அரசுகளுக்கு வெளிப்புறத் தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தல்களுக்கும் எதிராக பாதுகாப்பை வழங்கும். அதற்கு ஈடாக, அரசுகள் தங்கள் தலைநகரில் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவம் இருக்க அனுமதிக்கும்.
இராணுவத்தைப் பராமரிப்பதற்கு அந்தந்த அரசுகள் பணத்தை வழங்கும், மேலும் ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன் தொடர்பு கொள்வதை மேற்பார்வையிடும் ஒரு 'Resident' அல்லது ஐரோப்பிய அதிகாரியையும் கொண்டிருக்கும். ஆங்கிலேயர்கள் இந்த இந்திய மாநிலங்கள் மீது எந்த வரிகளையும் விதிக்கவில்லை, ஆனால் அதன் அளவு மற்றும் மக்கள்தொகையைப் பொறுத்து மாநிலம் செலுத்த வேண்டிய வருடாந்திர மானியம் நிர்ணயிக்கப்பட்டது.
1857-க்கு பின் இந்திய நிலை
சிப்பாய் கலகத்திற்குப் பின் 1858 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய கம்பெனியை புறக்கணித்து விட்டு, நாட்டின் மீது நேரடி ஆட்சியை கையிலெடுத்துக் கொண்டது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான சுதேச அரசுகள் ஆங்கிலேயர்களின் நட்பு நாடுகளாக இருந்தன. துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்களிடம் ன் ஒற்றுமை இல்லாதது, ஆங்கிலேயர்களுக்கு மிகவும் சாதகமாக மாறியது. 1900 ஆம் ஆண்டில், இந்திய துணைக் கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். மீதமுள்ள ஒரு பங்கில் சுமார் 650க்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் இருந்தன.
சுதேச அரசுகளின் அதிகாரங்கள்
சுதேச அரசுகளின் முக்கிய தனித்துவமான அம்சம், அவை உள் சுயாட்சியைக் கொண்டிருந்தன. சட்டம் ஒழுங்கு, நாணயம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்து மாநில விவகாரங்களும் ஆட்சியாளர்களால் தீர்மானிக்கப்பட்டன என்பதை இது குறிக்கிறது.
சுதேச அரசுகள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட மன்னர்களால் ஆளப்பட்டன. இவற்றில் சில மகாராஜா, நிஜாம், ராஜா, ராஜே, நவாப், தேஷ்முக், சத்ரபதி, பைக், மிர்சா அல்லது தாக்கூர் போன்றவை அடங்கும். இருப்பினும், ஆங்கிலேயர்கள் இந்த பெயர்கள் அனைத்தையும் 'இளவரசர்' என்றே அழைத்தார்கள், பிரிட்டிஷ் முடியாட்சிக்கு இணையானவை இருப்பதைத் தவிர்க்க 'ராஜா' என்ற வார்த்தையைத் தவிர்த்தனர்.
சுதேச அரசுகளுக்கும்-ஆங்கிலேயகர்களுக்கும் இருந்த ஒப்பந்தம்
சுதேச அரசுகளை மறைமுகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது முக்கியமானது என்பதை ஆங்கிலேயர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர், ஏனெனில் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவில்லை, மேலும் பல இளவரசர்கள் இராணுவத்தில் பணியாற்றினர் மற்றும் முக்கியப் பதவிகளை வகித்தனர். திருவிதாங்கூர், போபால், பரோடா, மைசூர் போன்ற அரச குடும்பங்களுக்கு மேஜர், ஜெனரல் அல்லது ஏர் வைஸ்-மார்ஷல் போன்ற கௌரவப் பதவிகள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன. சுதேச குடும்பங்களின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இராஜதந்திர பதவிகளிலும் காலனித்துவ அலுவலகங்களிலும் நியமிக்கப்பட்டனர். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது சுதேச அரசுகள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நின்றது.
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் இல்லாத அரசுகள்
சுதேச அரசுகளைத் தவிர, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இல்லாத வேறு சில மாநிலங்களும் இருந்தன. ஏனென்றால் அவை பிற நாடுகளால் காலனித்துவப்படுத்தப்பட்டன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டன. டாமன் மற்றும் டையூ, கோவா மற்றும் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி ஆகியவை போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்தன. பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் சந்திரநாகூர் ஆகியவை பிரெஞ்சு பிரதேசங்களாக இருந்தன. கோவா மட்டுமே ஆங்கிலேயர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆளப்படாத ஒரே மாநிலமாக இருந்தது.



Click it and Unblock the Notifications












