Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
அமெரிக்காவில் மிக மோசமான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்... என்ன குற்றம் தெரியுமா?
அமெரிக்க காவல்துறை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணை கொடூர குற்றத்திற்காக கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூ ஜெர்சியில் தனது இரண்டு சிறு குழந்தைகளைக் கொன்றதாகக் கடுமையான குற்றச்சாட்டின் பேரில், 35 வயது இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண் நியூ ஜெர்சியின் ஹில்ஸ்பரோவைச் சேர்ந்த பிரியதர்ஷினி நடராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று அவரது இரண்டு மகன்களும் அவர்களின் தந்தை வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் இறந்து கிடந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் எப்படி நடந்தது?
ஊடக அறிக்கைகளின் படி, ஜனவரி 13 அன்று மாலை 6.45 மணியளவில் காவல்துறைக்கு 911 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை குழந்தைகளின் தந்தை என்று கூறப்படும் ஒருவர் செய்துள்ளார். அவர் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, தனது ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மகன்களும் ஒரு படுக்கையறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டதாகக் காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார்.
அந்த போன் காலில், தனது மனைவி "அவர்களுக்கு ஏதோ செய்துவிட்டார்" என்றும் அவர் கூறியுள்ளார். அவசர மருத்துவக் குழுவினர் உடனடியாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு விரைந்தனர், ஆனால் அவர்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், அவர்களின் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. அந்த குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்பதை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவர்களின் தாய் கைது செய்யப்பட்டார்
சிறுவர்களின் தாயான 35 வயதான பிரியதர்ஷினி நடராஜன், விசாரணைக்குப் பிறகு பின்னர் கைது செய்யப்பட்டார். ஊடக அறிக்கைகளின் படி பிரியதர்ஷினி தனது மகன்களின் மரணங்கள் தொடர்பாக இரண்டு முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, அவர் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்தது தொடர்பான கூடுதல் குற்றச்சாட்டு ஒன்றையும் எதிர்கொள்கிறார். நடராஜன் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சோமர்செட் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்டைவீட்டாரின் அதிர்ச்சி
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், இந்தச் செய்தி தங்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டதாகக் கூறினர். "தன் குழந்தைகளையே கொன்ற ஒரு தாய்... இது மிகவும், மிகவும் சோகமானது. அந்தக் குழந்தைகளின் குடும்பங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர் சிறையில் இருப்பதே நல்லது" என்று அண்டை வீட்டுக்காரரான அமகா ஃபிடெல்லிஸ் கூறினார். சில அண்டை வீட்டார், அந்த சிறுவர்கள் சன்னிமீட் தொடக்கப் பள்ளியில் தங்கள் குழந்தைகளுடன் படித்ததாகக் கூறினர். "இது ஒரு பெரும் சோகம். யாரும் இதுபோன்ற ஒரு நிலையைச் சந்திக்கக் கூடாது. என்ன நடந்தது, ஏன் நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று மற்றொரு அண்டை வீட்டுக்காரரான பெக் இப்ராகிமோவ் கூறினார்.
அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
வடக்கு பிராந்திய மருத்துவப் பரிசோதகர் அலுவலகத்தால் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். இந்தப் பரிசோதனை குழந்தைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும், அவர்கள் எப்படி, ஏன் இறந்தார்கள் என்பதைக் கண்டறியவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார். காவல்துறை அதிகாரிகள், மருத்துவ பரிசோதகர்கள் மற்றும் வழக்கறிஞர் என அனைவரும் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications












