Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2025-ல் இந்தியாவில் அதிக நன்கொடை அளித்த டாப் 10 பணக்காரர்கள்...முதலிடத்தில் உள்ளவர் யார் தெரியுமா?
இந்தியாவின் தொண்டு கலாச்சாரம் சமீபத்திய ஆண்டுகளில் எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளர்கள் 2025 ஆம் ஆண்டில் ₹10,380 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர், இது கடந்த மூன்று ஆண்டுகளில் 85% அதிகரிப்பு ஆகும்.
2024 ஆம் ஆண்டில் 203 ஆக இருந்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 191 ஆகக் குறைந்திருந்தாலும், EdelGive Hurun India நன்கொடையாளர் பட்டியல் 2025 இன் படி, முதல் 10 நன்கொடையாளர்கள் மட்டுமே இணைந்து ₹5,834 கோடியை தானமாகக் கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 26% அதிகமாகும். இந்த பதிவில் இந்தியாவில் அதிகம் நன்கொடை அளித்துள்ள டாப் 10 பணக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ஷிவ் நாடார் குடும்பத்தினர் (₹2,708 கோடி)
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஷிவ் நாடார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக ஷிவ் நாடார் இந்தியாவின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவராக மாறியுள்ளார். அவர் அளித்துள்ள நன்கொடை கடந்த ஆண்டை விட 26% அதிகரித்துள்ளது. அவர் 2025-ல் ₹2,708 கோடி நன்கொடை அளித்துள்ளார், அதாவது ஒரு நாளைக்கு சுமார் ₹7.4 கோடி. அவர் கடந்த நிதியாண்டை விட ₹555 கோடி அதிகமாக நன்கொடை அளித்துள்ளார்.
முகேஷ் அம்பானி குடும்பம்(₹626 கோடி)
இரண்டாவது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. இந்த ஆண்டு அம்பானி குடும்பத்தின் பங்களிப்பு 54% அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் ₹626 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டதன் மூலம், அம்பானியின் தொண்டு கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் தொடர்ந்து விரிவடைகிறது.
பஜாஜ் குடும்பம் (₹446 கோடி)
பஜாஜ் குடும்பம் இந்த வருடமும் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, அவர்களின் நன்கொடை கடந்த ஆண்டை விட 27% அதிகரித்துள்ளது. கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் அவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
குமார் மங்கலம் பிர்லா & குடும்பத்தினர் (₹440 கோடி)
பிர்லா குடும்பம் கடந்த அண்டை 32% அதிகரித்த நன்கொடையுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அவர்கள் அளித்துள்ள ₹440 கோடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரடியாக தனிப்பட்ட நிதியிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முதன்மையாக சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவழிக்கப்பட்டது.
கௌதம் அதானி & குடும்பத்தினர் (₹386 கோடி)
கடந்த ஆண்டை விட 17% அதிகமாக நன்கொடை அளித்தன் மூலம் அதானி குடும்பம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அவர்களின் பெரும்பாலான நன்கொடைகள் கல்விக்காக அளிக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அதானி அறக்கட்டளையின் கீழ் திறன் மேம்பாடு மற்றும் சுகாதார மேம்பாடுகளுக்காக செலவிடப்படுகிறது.
நந்தன் நீலேகனி (₹365 கோடி)
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் நந்தன் நீலேகனி உள்ளார். நீலேகனியின் நன்கொடை 2024 ஆம் ஆண்டை விட 19% அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நீலேகனி தொண்டு நிறுவனங்கள் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது தொண்டு நிறுவனத்தை ஈடுபடுத்தி வருகிறார்.
ஹிந்துஜா குடும்பம் (₹298 கோடி)
இந்த ஆண்டில் ஹிந்துஜா குடும்பம் ஒன்பது இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அவர்களின் நன்கொடை இந்த வருடம் 150% அதிகரித்துள்ளது. ஹிந்துஜா அறக்கட்டளை மூலம் சுகாதாரம் மற்றும் கல்வியில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ரோகினி நீலேகனி (₹204 கோடி)
இந்தியாவின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட பெண் கொடையாளரான ரோகினி நீலேகனி, இரண்டு இடங்கள் முன்னேறி ₹204 கோடி நன்கொடை அளித்துள்ளார், இது கடந்த ஆண்டை விட 33% அதிகமாகும். ரோகினி நீலேகனி தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வி, காலநிலை மற்றும் சிவில் சமூக நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவரது பணி பரவியுள்ளது.
சுதிர் மேத்தா & சமீர் மேத்தா (₹189 கோடி)
மேத்தா குடும்பம் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது, நன்கொடை அளிப்பதில் 69% முன்னேற்றத்துடன் ஒன்பது இடங்கள் முன்னேறி அவர்கள் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நுழைந்துள்ளனர். அவர்களின் UNM அறக்கட்டளை குஜராத் முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
சைரஸ் எஸ். பூனவல்லா & அதர் பூனவல்லா (₹173 கோடி)
கடந்த ஆண்டை விட பூனவல்லா குடும்பம் மூன்று இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது, அவர்களின் நன்கொடைகள் இந்த ஆண்டு 21% அதிகரித்துள்ளன. வில்லூ பூனவல்லா அறக்கட்டளை மூலம் அவர்களின் நன்கொடை, கல்வி, சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை ஆதரிக்கிறது.



Click it and Unblock the Notifications

