Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சுதந்திர இந்தியாவின் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டின் இந்த ஊரில்தான் ஏற்றப்பட்டதாம்... டெல்லியில் இல்லையாம்...!
Independence Day 2025: இந்தியாவின் சுதந்திர தினம் என்பது இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான மற்றும் விஷேசமான நாளாகும். 200 ஆண்டுகளுக்கும் மேலான ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்த நாளைத்தான் நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் 15, 1947, இந்தியா ஒரு ஒரு சுதந்திர தேசமாக உருவான நாள்.
நாடு முழுவதும் சாலைகளில் மக்கள் இந்தியாவின் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு மக்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் பிரதிபலித்தது. முதல் முறையாக, மூவர்ணக் கொடி சுதந்திர இந்தியாவின் பெருமைமிக்க அடையாளமாக மாறியது.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தேசியக்கொடி டெல்லியின் செங்கோட்டையில் கம்பீரமாக ஏற்றப்படுகிறது. ஆனால் இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தன்று முதல் அதிகாரப்பூர்வ கொடி ஏற்றம் டெல்லியில் நடைபெறவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா. மாறாக, அது வேறு ஒரு நகரத்தில் நடைபெற்றது. அது எந்த நகரம், ஏன் டெல்லியில் ஏற்றப்படாமல் இங்கு ஏற்றப்பட்டது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ கொடி ஏற்றம்
1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 5:30 மணியளவில், சூரிய வானத்தில் பிரகாசமாக உதித்த போது, இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ கொடி ஏற்றம் சென்னையில்(அப்போது மதராஸ் மாகாணம்) உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் மிகப்பெரிய தலைமையகத்தை அமைத்த இடமாக மதராஸ் மாகாணம் இருந்தது. இந்தியாவின் இந்த வரலாற்று தருணத்திற்காக, 12 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட ஒரு சிறப்பு மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டது, இது தூய பட்டால் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.
சுதந்திரமும், அதிகாரப் பரிமாற்றமும் டெல்லிக்கு மட்டுமல்ல, அவை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன என்பதன் அடையாளமாக இது மாறியது. தெற்கில் இருந்த பிரிட்டிஷ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது இந்தியாவின் சுதந்திரத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக இருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொடி இன்னும் சென்னையில் உள்ள Fort அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. காலப்போக்கில் சேதமடையாமல் பாதுகாக்க, காற்று புகாத கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது, அதன் நிலையைப் பராமரிக்க சிலிக்கா ஜெல் அருகில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் எப்போது முதன் முதலில் கொடி ஏற்றப்பட்டது?
இந்தியப் பிரதமர் தற்போது ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினாலும், 1947 இல் அப்படி நடக்கவில்லை. ஆகஸ்ட் 15, 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே உள்ள பிரின்சஸ் பூங்காவில் தேசியக் கொடியை ஏற்றினார். அதே இரவு, நாடாளுமன்ற வளாகத்தில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க "Tryst with Destiny" என்ற உரையை நிகழ்த்தினார்.
ஆகஸ்ட் 16, 1947 அன்றுதான் ஜவஹர்லால் நேரு செங்கோட்டைக்குச் சென்று அங்கு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அவர் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார், மேலும் தன்னை 'இந்தியாவின் பிரதம சேவகர்' என்று அழைத்துக் கொண்டார். அன்றிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது.



Click it and Unblock the Notifications
