Latest Updates
-
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
உலகையே நடுங்க செய்த மாவீரன் நெப்போலியன் முயல்களிடம் தோற்று ஓடிய வராலாறு தெரியுமா?
உலக வரலாற்றில் மிகப்பெரிய அரசர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது அலெக்ஸாண்டரும், நெப்போலியனும்தான். மேற்கத்திய படையெடுப்பாளர்களான இவர்கள் உலகின் பெரும்பகுதியை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார்கள், அதற்காக பல போர்களையும் நடத்தினார்கள்.
நெப்போலியன் உலகையே நடுங்கச் செய்தாலும் அவர் வாழ்க்கையில் சில தோல்விகளை சந்திக்கத்தான் செய்தார். அதில் சில தோல்விகள் நம்பமுடியாத அளவிற்கு வினோதமாக இருந்தன. உலகையே ஆள நினைத்த நெப்போலியன் முயல்களிடம் தோற்று பின்வாங்கிய சுவாரஸ்யமான வராலாற்று சம்பவம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த சம்பவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1807 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், டில்சிட் உடன்படிக்கையில் வெற்றிகரமாக கையெழுத்திட்ட பிறகு, நெப்போலியன் போனபார்டே அவரது சாதனைகளுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டாட, அவர் ஒரு பெரிய அளவிலான முயல் வேட்டைக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்தார். அவரது தலைமைப் பணியாளரான லூயிஸ்-அலெக்ஸாண்ட்ரே பெர்த்தியர், இந்த ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றார் மற்றும் நெப்போலியனுக்கு வெற்றிகரமான அனுபவத்தை அளிக்க ஏராளமான முயல்களை கொண்டு வர உத்தரவிட்டார்.
வேட்டையாடும் நிகழ்வுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டில் வளர்க்கப்பட்ட முயல்களை பெர்த்தியர் ஆர்டர் செய்தார், அவை ஒரு அற்புதமான வேட்டை அனுபவத்தை அளிக்கும் என்று அவர் நினைத்தார். இருப்பினும், வேட்டை தொடங்கியபோது, யாரும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்தது. முயல்கள் நெப்போலியன் மற்றும் அவரது கூட்டாளிகளை நோக்கி ஒடின, அவர்கள் தங்களுக்கு உணவு அவர்கள் தரப்போகிறார்கள் என்று நினைத்து அவை ஓடியிருக்கலாம். இந்த எதிர்பாராத சூழ்நிலை, ஒரு விறுவிறுப்பான வேட்டைக்கு பதிலாக நகைச்சுவையான அதேசமயம் பேரழிவை ஏற்படுத்தும் செயலாக மாறியது.
முயல்கள் வேகமாக நெருங்கி, அவை வேகமாக வேட்டையாடுபவர்களைச் சூழ்ந்தன, இதன் விளைவாக குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்தது, சில நொடிகளில் கடுமையான மற்றும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியது. பசித்த முயல்கள் வேட்டையாடுபவர்களின் ஆடைகளையும் காலணிகளையும் உணவாகக் கருதி கடிக்க ஆரம்பித்தன. இந்த அசாதாரண முயல் தாக்குதலால் நெப்போலியனும் அவரது ஆட்களும் பின்வாங்கினர்.
இந்த குழப்பமான சூழ்நிலைக்கு நடுவில், நெப்போலியன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்றார், ஆனால் முயல்கள் தொடர்ந்து அவரைத் துரத்தின. அவரது ஆட்கள் சாட்டைகளால் முயல்களை எதிர்த்துப் போராட முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. முயல்கள் மிகவும் அருகாமையில் இருந்ததால் அவற்றை சுட முடியாது என்பதை உணர்ந்த நெப்போலியன், இந்த பயங்கரமான தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையில் பின்வாங்கி தனது வண்டியில் பின்னோக்கி சென்றார். இருப்பினும், முயல்கள் விடாமுயற்சியுடன் இருந்தன, மேலும் அவரது வண்டிக்குள் இறுதியாக நுழைந்தன.
முயல்களை யாராலும் நிறுத்த முடியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, முழு சூழ்நிலையும் கட்டுப்பாட்டை மீறி ஆபத்தானதாக மாறியது. அவை பேரரசரின் திட்டங்களை முறியடித்தன, இது அந்த மாவீரரைப் பார்த்து அனைவரும் சிரிக்கக்கூடிய அவமானகரமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. இறுதியில், முயல்கள் ஆர்வத்தை இழந்து சிதறி ஓடின, நெப்போலியன் சங்கடமாகவும், தோற்கடிக்கப்பட்டதாகவும் உணர்ந்தார்.
இந்த நம்ப முடியாத நிகழ்வைக் கண்டவர்கள், நெப்போலியனின் வீரத்தையும், சக்திவாய்ந்த தலைவராக இருந்த அவரது நற்பெயரையும் கெடுக்கும் என்று கருதி, அதை ரகசியமாக வைத்திருப்பதாக உறுதியளித்தனர். 1895 ஆம் ஆண்டில், பெர்தியரின் நினைவுக் குறிப்புகள் வெளியிடப்பட்டபோது இந்த கதை வெளிச்சத்திற்கு வந்து, இது வேடிக்கையான நிகழ்வை அம்பலப்படுத்தியது.



Click it and Unblock the Notifications
