துபாய் மக்களிடம் வருமான வரியே வாங்காமல் எப்படி உலகின் பணக்கார நாடாக உள்ளது தெரியுமா? இப்படித்தான்...!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) ஒரு பகுதியாக இருக்கும் பாலைவன நகரமான துபாய் அதன் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கும், அதிநவீன வசதிகளுக்கும் மட்டுமல்ல அதன் கவர்ச்சிகரமான வரி முறைக்கு, குறிப்பாக வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உலகம் முழுவதும் பிரபலமானதாக உள்ளது. ஏனெனில் இங்கு மக்களின் தனிநபர் வருமான வரி என்பது முற்றிலும் கிடையாது.

துபாய் வரிவிதிப்பு கொள்கையின் படி, இங்கு வசிப்பவர்கள் தங்கள் முழு வருமானத்தையும் அரசுக்கு எந்த வரியும் செலுத்தாமல் அனுபவிக்க முடியும், இதனால் அவர்களின் செலவழிக்கும் திறன் அதிகரிக்கும் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும். இந்த கொள்கை துபாயில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

How Dubai Became Rich With Zero Income Tax

சில நாடுகள் முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தை பிடுங்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து கொண்டிருக்கும் நிலையில் துபாய் எப்படி மக்களிடம் வரியே வாங்காமல் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்று நிச்சயம் உங்களுக்குள் கேள்வி எழலாம். அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வணிகங்கள் மற்றும் பிற துறைகளுக்கான துபாயின் வரி அமைப்பு

துபாய் குடியிருப்பாளர்கள் வருமான வரி விலக்கிலிருந்து பயனடைந்தாலும், இங்குள்ள நிறுவனங்கள் அரசாங்கத்தால் சில வரிகள் விதிக்கப்படும் மற்றொரு கட்டமைப்பிற்குள் செயல்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் AED 375,000(இந்திய மதிப்பில் 88 லட்சம்) தாண்டிய வணிக லாபத்திற்கு 9% கார்ப்பரேட் வரி விகிதத்தை அறிமுகப்படுத்தியது.

துறைரீதியாக, எண்ணெய் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் 55% முதல் 85% வரை வரி விகிதங்களை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் வெளிநாட்டு வங்கிகளுக்கு 20% நிலையான கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது.

How Dubai Became Rich With Zero Income Tax

சுகாதாரம், கல்வி மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த அல்லது பூஜ்ஜிய வாட் வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு சுமார் 5% கஸ்டம் ட்யூட்டி விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் புகையிலை, ஆற்றல் பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள் 50% முதல் 100% வரை வரி விதிக்கப்படுகின்றன. ஹோட்டல் தங்குமிடங்களுக்கு 10% வரை வரி விதிக்கப்படுகிறது.

துபாயில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறதா?

துபாயில் தங்கள் தொழிலைத் தொடங்கத் திட்டமிடும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, AED 375,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி கட்டமைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன, இது நிறுவனங்களின் ஆரம்ப கட்டத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு அமைப்பு துபாயின் வணிகங்களுக்கான ஈர்ப்பைப் பாதுகாப்பதற்கும் அரசாங்க வருமானத்தை ஆதரிப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துகிறது. உலகளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு துபாய் ஒரு விருப்பமான இடமாக இருக்கிறது.

இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்கள்

துபாய் மக்களும், நிறுவனங்களும் ஒரே வருமானத்தில் இரட்டை வரிவிதிப்பைச் சந்திக்காது என்பதை உறுதி செய்யும் விரிவான இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்களை (DTAs) கொண்டுள்ளது. DTA ஒப்பந்தத்தில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளைக் கொண்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் அடங்கும். எனவே துபாய் மக்கள் வரி இல்லாத வருவாய் சூழலை அனுபவித்தாலும், துபாய் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்மற்றும் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் தங்கள் வரி அமைப்பை திறமையாக உருவாக்கியுள்ளது.

Desktop Bottom Promotion