இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலை அமைக்க அனுமதி கொடுத்த முதல் முகலாய அரசர் யார் தெரியுமா?

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி என்றால் அது ஆங்கிலேயர்களிடம் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்ததுதான். பிரிட்டனை விட வலுவான மற்றும் சிறந்த பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டிருந்தாலும் இந்தியா பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் சென்றதற்கு பல காரணங்கள் உள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆகஸ்ட் 24, 1608 அன்று சூரத்தில் முதன் முதலாக இந்தியாவில் தரையிறங்கினர். வியபாரிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் பின்னர் அவர்களின் இராணுவ வலிமையாலும், பொருளாதார வலிமையாலும் குறிப்பாக தந்திரத்தாலும் இந்தியாவை 1757 முதல் 1947 வரை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்கள் ஏன் இந்தியாவிற்கு வந்தனர், எப்படி இங்கு ஆட்சியைப் பிடித்தனர் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

How Did England Take Over India in Tamil

புதிய கடல் பாதை

போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு இந்தியாவின் கடல் வழி வணிகத்திற்கான பாதை திறந்தது. இது இந்தியாவை ஐரோப்பாவின் வர்த்தக வட்டத்தின் கவனத்தின் மையமாக மாற்றியது மற்றும் ஐரோப்பிய சக்திகள் தங்கள் வணிகத்தை ஆசியாவிலும் பரப்ப வேகமாக விரைந்தார்கள். அவர்களின் ஆரம்ப நோக்கம் வியாபாரமாக இருந்தாலும், நாளடைவில் ஐரோப்பிய நாடுகள் இந்திய பிரதேசங்களை கைப்பற்றத் தொடங்கின. அவர்களில் ஆங்கிலேயர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி எப்படி உருவானது?

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் 1600-ல் ராணி எலிசபெத் வழங்கிய சாசனத்தின் கீழ் 1599 இல் உருவாக்கப்பட்டது. The British Joint Stock Company, என்று பெயரிடப்பட்ட இந்த நிறுவனம், தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக ஜான் வாட்ஸ் மற்றும் ஜார்ஜ் ஒயிட் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த பங்கு நிறுவனத்தில் பிரிட்டிஷ் வணிகர்கள் மற்றும் உயர்குடியினர் பங்குகளை வைத்திருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்த நிறுவனத்தின் மீது எந்த கட்டுப்பாட்டு அதிகாரமும் இல்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எப்படி வந்தனர்?

ஐரோப்பாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய தொழிலாக இறைச்சியைப் பாதுகாப்பது இருந்ததால், அதற்குத் தேவையான முக்கியப் பொருளான மசாலாப் பொருட்களை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களாக இந்தியாவிற்குள் நுழைந்தது. இது தவிர, அவர்கள் பட்டு, பருத்தி, இண்டிகோ சாயம், தேயிலை மற்றும் அபின் ஆகியவற்றில் வர்த்தகம் செய்தனர்.

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் 1613 ஆம் ஆண்டு சூரத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்க்கு வழங்கினார். 1615 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் I இன் தூதர் தாமஸ் ரோ, முகலாயப் பேரரசு முழுவதும் வணிகம் செய்யவும் தொழிற்சாலைகளை நிறுவவும் ஜஹாங்கீரிடமிருந்து ஒரு ஏகாதிபத்திய அனுமதியைப் பெற்றார்.

அதைத்தொடர்ந்து, விஜயநகரப் பேரரசு கிழக்கிந்திய கம்பெனிக்கு மெட்ராஸில் ஒரு தொழிற்சாலையைத் திறக்க அனுமதி வழங்கியது, மேலும் பிரிட்டிஷ் நிறுவனம் மற்ற ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களை அவர்களின் வளர்ச்சியாலும், அதிகாரத்தாலும் வீழ்த்தினார்கள்.

நாளடைவில் அவர்களின் வியாபாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது, அதனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கரையோரப் பகுதிகளில் பல வர்த்தக நிலையங்கள் நிறுவப்பட்டன மற்றும் கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாய் ஆகிய மூன்று முக்கிய வர்த்தக நகரங்களில் பிரிட்டிஷ் சமூகங்கள் வளர்ந்தன.

ஆங்கிலேயர்கள் இந்திய அரசியலில் எப்படி நுழைந்தார்கள்?

ஆரம்பகால கிழக்கிந்திய கம்பெனி, இந்தியா பல ராஜ்ஜியங்களின் ஒரு பெரிய தொகுப்பு என்பதை உணர்ந்து அவர்கள் இந்தியாவின் செல்வதை சுரண்டத் தொடங்கினர். இதனால், இந்நிறுவனம் இந்திய அரசியலில் தலையிடத் தொடங்கியது மற்றும் அவர்களின் செல்வத்தில் நிலையான உயர்வைக் காணத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 1764 இல் நடந்த பக்சர் போரில் கேப்டன் மன்ரோ வங்காளத்தின் மிர் காசிம், அவாத்தின் ஷுஜாதுலா மற்றும் முகலாய மன்னர் ஷா ஆலம் II ஆகியோரின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.

அதன்பின் மெதுவாக ஆனால் உறுதியாக கிழக்கிந்திய கம்பெனி ஒரு வர்த்தக நிறுவனத்திலிருந்து ஆளும் நிறுவனமாக மாறத் தொடங்கியது. கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரங்கள் 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்குப் பிறகு கலைக்கப்படும் வரை 1858 வரை உறுதியாக இருந்தது, அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியைத் தொடங்க பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவை நேரடியாகக் கட்டுப்படுத்தியது.

Desktop Bottom Promotion