குரு பூர்ணிமா 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

ஆடி மாதத்தின் பெளர்ணமி நாளைதான் குரு பூர்ணிமா என்கிறோம்.. பெளர்ணமி என்பது முழு நிலவுதாள்.. இது அனைத்து மதங்களிலும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் புனித நாளாகவும் வழிபாட்டு நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.

அதிலும் ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி தினம் தனித்துவமானது. இந்த ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி குருவிற்குரிய நாளாக கருதப்படுகிறது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, குரு பூர்ணிமா ஆஷாட மாதத்தில் பூர்ணிமா திதியில் (பௌர்ணமி தினம்) அனுசரிக்கப்படுகிறது.

Guru purnima 2024 time puja rituals history and significance

குரு பூர்ணிமா எப்போது?

இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜூலை 20ம் தேதியான இன்று மாலை 06.10 மணி முதல், ஜூலை 21ம் தேதியான நாளை மாலை 04.51 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. அன்றைய தினம் உத்திராடம் நட்சத்திரமும் இணைந்து வருவது இன்னும் சிறப்பானதாகும். உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் ஆவார்.

குரு பூர்ணிமா 2024 முக்கியத்துவம்

குரு பூர்ணிமா நாளில் குருமார்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களை நினைவு கூர்ந்து, அவர்களை போற்றி வழிபடும் நாளாக குறிப்பிடப்படுகிறது. குரு என்பவர் சரியான பாதையைக் காட்டுபவர். தனது படிப்பினைகளாலும் ஞானத்தாலும் உலகை தொடர்ந்து அறிவூட்டுபவர். அவர் நீதியின் பாதையைப் பின்பற்ற ஊக்குவிக்கிறார்.. எண்ணங்களின் யதார்த்தத்தை நமக்குக் கற்பிக்கிறார். அவருடைய அறிவுறுத்தல் இல்லாமல், நம் வழியில் வரும் இருளை அகற்றுவது கடினம்..

குருதான் மனிதநேயத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார். சில நேரங்களில் அவர் ஆன்மீக குருவாக இருக்கிறார், மிக ஆழமான ஆன்மீக புரிதலுடன் நம் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறார். நல்ல வாழ்க்கை வாழ ஒரு குரு தேவை. பெரும்பாலான நேரங்களில், சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில் நமக்கு சற்று குழப்பம் இருக்கும்.. எனவே உங்கள் தாய் மற்றும் தந்தையிடமிருந்து வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள், அவர்கள் முதல் குருக்களாக இருப்பார்கள்...

குரு பூர்ணிமா 2024 வரலாறு

இந்து புராணங்களின்படி, வேத வியாசரின் பிறந்த நாளையே நாம் குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறோம்.. இந்துக்களின் மிக முக்கியமான, புனிதமான நூல்களான மகாபாரத காவியத்தையும், பாகவத புராணத்தையும் எழுதியவர் வேத வியாசர்தான். வாய்மொழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த வேதங்களை, எழுத்து வடிவத்திற்கு முதன் முதலில் கொண்டு வந்தவர் வேத வியாசர்தான்.

அதனால் தான் இவரை குருவிற்கு எல்லாம் மேலான சிறப்பான குருவாக இந்து மதம் போற்றுகின்றனது. இவரே குரு-சிஷ்ய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இவரது பிறந்த நாளான ஆஷாட மாதத்தில் வரும் பெளர்ணமியை வியாச பூர்ணிமா என்றும் அழைப்பதுண்டு.

குரு பூர்ணிமா 2024 ஐ எப்படி கொண்டாடுவது?

குரு பூர்ணிமாவின் இந்த புனிதமான நாளில், பக்தர்கள் தங்கள் குருவிடம் பிரார்த்தனை செய்து, குரு மந்திரங்களை உச்சரித்து, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபத்தை ஏற்றி, ஆசீர்வாதங்களைப் பெறுவது நல்லது..

குரு பூர்ணிமா அன்று என்ன செய்ய வேண்டும்?

அதிகாலையில் எழுந்து உங்கள் தந்தை, தாய் மற்றும் சகோதரர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள். குளித்த பிறகு, சூரியனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அறிவிற்கும் ஞானத்திற்கும் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானை வணங்குங்கள். உங்களுக்கு ஆன்மிக குரு இருந்தால், உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்..

அவருடைய பாதங்களைத் தொட்டு ஆசிகளைப் பெறவும் நீங்கள் அவரைச் சந்திக்க வேண்டும். குரு பூர்ணிமாவின் இந்த புனித நாளில், குருக்களுக்கு ஆடைகள், காலணிகள், பழங்கள் மற்றும் தக்ஷிணை வழங்குங்கள். உங்கள் தாய் தந்தைக்கும் இனிப்பு கொடுங்கள். அன்று முழுவதும் குரு மந்திரத்தை சொல்லுங்கள்.

Story first published: Saturday, July 20, 2024, 14:56 [IST]
Desktop Bottom Promotion