Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபம் செல்லும் குரு பகவான்: மே முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Guru Peyarchi 2024: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் வரை பயணிப்பார். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் குரு பகவான் மே மாதம் 01 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார். ரிஷப ராசிக்கு குரு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது.

குறிப்பாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தாம்பத்ய வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நட்லல வரன் கிடைக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலனாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வெற்றி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திடீரென்று பணம் தேடி வரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சற்று கவனம் செலுத்தினால், பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











