Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
உலக வரலாற்றில் ஹிட்லரின் பெயரை தவிர்த்து விட்டு ஒருபோதும் எழுத முடியாது.1934 முதல் 1945 வரை நாஜி ஜெர்மனியின் தலைவராக இருந்த அடால்ஃப் ஹிட்லர், இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி, ஆறு மில்லியன் யூதர்களின் இனப்படுகொலைக்கு வழிவகுத்த கொடுங்கோலராக இருந்தார், அவர் செய்த அட்டூழியங்களுக்காக அவர் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்.
அவரது செயல்கள் அதற்கு முன் யாரும் செய்யாத அளவிற்கு மரணத்தையும், அழிவையும் விளைவித்தன. ஆனால் பெரும் பொருளாதார மந்தநிலைக்கு பிறகு நாஜி ஆட்சியின் கீழ் ஜெர்மனி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது.

எவ்வாறாயினும், இந்தக் கொள்கைகளில் பல இனத் தூய்மை, சர்வாதிகாரம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றின் சித்தாந்தங்களில் வேரூன்றி, அவருடைய வழக்கமான உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது. ஹிட்லரின் ஆட்சியின் போது ஜெர்மனியில் செய்யப்பட்ட சில மாற்றங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டோபான்
ஹிட்லர் ஆட்டோபான் என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை அமைப்பை விரிவுபடுத்தினார், இது பெருமளவில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது. அதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள நவீன நெடுஞ்சாலை அமைப்புகளுக்கு முன்மாதிரியாகவும் மாறியது.
பொருளாதார மீட்பு
ஹிட்லரின் அரசாங்கம் ஆரம்பத்தில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை பெரும் மந்தநிலையின் போது பொதுப்பணித் திட்டங்கள் மற்றும் இராணுவ மறுசீரமைப்பு மூலம் வேலையின்மையை கணிசமாகக் குறைத்தது. பல பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மூலம் இழந்த பொருளாதாரத்தை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
வோக்ஸ்வாகன்
"மக்கள் கார்" (வோக்ஸ்வாகன்) என்று அழைக்கப்பட்ட காரின் உருவாக்கம் என்பது சராசரி ஜெர்மன் மக்களுக்கு கார்களை மலிவு விலையில் கொடுப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்தது, இருப்பினும் பொதுமக்களுக்கான இந்த வெகுஜன உற்பத்தி போருக்குப் பிறகு தொடங்கவில்லை.
விலங்குகளுக்கான உரிமைகள்
நாஜி ஜெர்மனியில் விலங்கு பாதுகாப்புக்கான சட்டங்கள் இருந்தன, மேலும் ஹிட்லரின் ஆட்சியின் போது இயற்றப்பட்ட சில சட்டங்கள் நவீன ஐரோப்பிய விலங்கு உரிமைகள் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. மேலும் மனிதர்களை விலங்கு போல அடைத்து வைத்து நடத்தபட்ட பூங்காக்களை நிரந்தரமாக மூடினார்.
புகையிலை எதிர்ப்பு பிரச்சாரம்
நாஜி ஜெர்மனி 20 ஆம் நூற்றாண்டு உலகில் மிகவும் குறிப்பிடத்தக்க பொது புகைபிடித்தல் எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஒன்றை மேற்கொண்டது மற்றும் புகைபிடித்தல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு இடையேயான தொடர்பை அங்கீகரித்து அதனைத் தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டது.
பொது சுகாதாரம்
உடல் உடற்பயிற்சியை ஊக்குவித்தல் மற்றும் தாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை ஹிட்லரின் ஆட்சி செயல்படுத்தியது. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேம்படுத்தியது.
தொழிலார்களுக்கான ஜாய் திட்டம்
இந்த திட்டம் ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மலிவு விடுமுறைகள், கச்சேரிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வாய்ப்புகள் உட்பட ஓய்வு நேரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த திட்டம் வகுக்கப்பட்டதே தவிர செயல்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை.
கட்டிடக்கலை
ஹிட்லர் பல கட்டிடக்கலை திட்டங்களை நியமித்தார், அவற்றில் பலவற்றை ஆல்பர்ட் ஸ்பியர் வடிவமைத்தார். இந்த கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகள் நவீன கட்டிடக்கலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கலாச்சார மறுமலர்ச்சி
ஹிட்லரின் அரசாங்கம் ஜெர்மன் கலாச்சாரம் மற்றும் கலைகளை ஊக்குவித்தது, தேசிய பெருமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது, இருப்பினும் இது பெரும்பாலும் நாஜி சித்தாந்தத்துடன் இணைக்கப்பட்டது மற்றும் பிற நாட்டு கலாச்சாரங்களை முற்றிலும் தடை செய்தது.
ராக்கெட் தொழில்நுட்பம்
ஹிட்லரின் ஆட்சியின் கீழ் ஜெர்மன் ஆயுத புரட்சியைக் கண்டது. குறிப்பாக மற்ற நாடுகளை விட ஜெர்மனில் பல்வேறு புதிய ஆயுதங்கள் கண்டறியப்பட்டன. ராக்கெட் தொழில்நுட்பத்தில் போர்க்கால மேம்பாடுகள், இராணுவ பயன்பாட்டிற்கான நோக்கம் கொண்டிருந்தாலும், ஆயுத புரட்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்தது.



Click it and Unblock the Notifications
