Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
சனிக்கிழமைகளில் பலர் கருப்பு நிற ஆடைகளை அணிவார்கள். ஏனெனில் சனிக்கிழமை சனி பகவானுக்கு உரியது. வேத ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். கருப்பு என்பது சனியின் நிறம். சனிக்கிழமையன்று கருப்பு அணிந்தால் சனிபகவானின் அருள் கிடைக்கும். ஜோதிடத்தில் இந்த நிறம் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நபரின் ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்க நிறம் உதவுகிறது. சனிக்கிழமையில் கருப்பு அணிவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஜோதிட ரீதியாக கருப்பு என்பது பாதுகாப்பின் நிறம். இது பல்வேறு எதிர்மறை சக்திகளிலிருந்து நம்மை காத்து பாதுகாப்பை வழங்குகிறது. எனவே சனிக்கிழமை கருப்பு அணிந்துகொள்வது சிறப்பு. பொதுவாக வாழ்க்கையில் கெட்ட அல்லது ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்பவர்களை சனி தண்டிப்பார். சனியின் சிவப்புக் கண்களைத் தவிர்க்க, நீங்கள் சனிக்கிழமையன்று கருப்பு ஆடைகளை அணிய வேண்டும்.

சனி ஏன் கருப்பு நிறத்தை விரும்புகிறது?
சனியின் தாயார் பெயர் சாயா. அவள் கர்ப்ப காலத்தில் சிவபெருமானுக்காக கடுமையான தவம் செய்தாள். இதனால் கர்ப்ப காலத்தில் அவளால் உடல்நிலையை சரியாக கவனிக்க முடியவில்லை. இதன் விளைவாக சனி கருப்பு நிறத்துடன் பிறந்தார். அதனால் சனிக்கு கருப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும்.
சனிக்கிழமையன்று கருப்பு அணிந்தால் சனிபகவானின் அருள் கிடைக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது ஏழரை சனி இருந்தால் அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம். ஏனெனில் கருப்பு நிறம் சனி பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
சனிக்கு நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் பிடிக்கும். சனிபகவானின் அருள் பெற நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். சனிக்கிழமையில் கருப்பு மற்றும் நீல நிற ஆடைகளை அணிந்தால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
சனிக்கிழமையன்று கருப்பு அணிந்தால் உங்களின் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும். மேலும், நீங்கள் கருப்பு ஆடைகளை அணிந்தால், ஏழரை சனியின் தீமைகளை சமாளிக்க ஜோதிடம் உதவும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், அதிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
ஆனால் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமை சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டாம். மேலும் சிவப்பு நிற பொருட்களை வாங்கக்கூடாது. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்தின் நிறம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்க்கும் சனிக்கும் இடையே நல்ல உறவு இல்லை. இவை இரண்டும் எதிர்கிரகங்கள். எனவே சனி கிழமையில் செவ்வாயின் நிறத்தை அணிந்தால், கஷ்டங்கள் உங்களிடம் ஏறிக் கொள்ளும்.
மேலும், சனிக்கிழமைகளில் வெள்ளை அணியக் கூடாது. இதிலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்காது. இந்த எல்லா காரணங்களுக்காகவும் சனிக்கிழமையன்று சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தை அணியாமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications