Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: இது ஒன்னும் புதுசு இல்ல...தமிழகம் எதிர்கொண்ட புயல்கள் & இறப்புகள் இவ்வளவா?
Cyclone Michaung: தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. அந்த வகையில், நடப்பண்டில் டிசம்பர் 3 நேற்று வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், தன் கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்க்கிறது. தற்போது சென்னை மழைநீர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மிக்ஜாம் புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை பல்வேறு புயல்கள் மற்றும் வெள்ளங்களை சந்தித்துள்ளது. 2015 சென்னை வெள்ளத்தை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது பொதுவானது. அதில், எந்தவித அழிவுகளோ அல்லது பேரழிவுகளோ நடக்காமல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களும் அரசும் மேற்கொள்ள வேண்டும்.
புயல்களால் தமிழக மக்கள், குறிப்பாக சென்னை மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இயற்கையின் இத்தகைய அழிவுகளை நாம் காண்கிறோம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய புயல்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
பெயரிடப்படாத புயல் (1994)
199ஆம் ஆண்டு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்தில் கரையைக் கடந்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை இல்லாததால் உயிர் மற்றும் உடைமை சேதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
டிரிபிள் சைக்ளோன்ஸ் (2005)
பியார், பாஸ் மற்றும் ஃபனூஸ் என பெயரிடப்பட்ட மூன்று கனமான சூறாவளிகள் இணைந்து ஒரு மெகா புயலை உருவாகியது. டிசம்பர் 7, 2005 அன்று, இந்த மெகா புயல் மணிக்கு 101 கிமீ வேகத்தில் காற்றுடன் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது, அவை நீண்ட நேரம் கரையைத் தாக்கின.
வட தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்ணை விளைபொருட்கள் மற்றும் உபகரணங்களை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
நிஷா புயல் (2008)
ஃபனூஸுக்குப் பிறகு தமிழ்நாட்டை தாக்கிய பெரிய புயல் நிஷா புயல்(Cyclone Nisha). இது 2008 வட இந்தியப் பெருங்கடற்புயற்காலத்தின்போது ஏற்பட்ட ஒன்பதாவது புயல் ஆகும். இப்புயல் நவம்பர் 25, 2008இல் தோன்றி, நவம்பர் 29, 2008 வரை நீடித்தது. மேலும் 2008ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஏழாவது புயலான நிஷா, நவம்பர் 25 அன்று, காரைக்கால் அருகே மணிக்கு 83 கி.மீ வேகத்தில் காற்றுடன் கரையைக் கடந்தது.
இந்த புயலினால் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமார் 189 பேர் உயிரிழந்துள்ளனர். நிஷா புயல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைத் தாக்கிய முதல் புயல் ஆகும். 2,800 க்கும் மேற்பட்ட வீட்டு விலங்குகள் இறந்தன மற்றும் 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.
ஜல் புயல் (2010)
நிஷா புயலின் தாக்கத்திற்கு பிறகு 2010இல் ஜல் புயல், தென் சீனக் கடலில் உருவாகி இந்தியப் பெருங்கடலை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 111 கிமீ வேகத்தில் காற்று வீசிய ஜல் புயல் நவம்பர் 6 ஆம் தேதி சென்னையில் கரையைக் கடந்தது. இந்த புயலின் போது, சுமார் 70,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த இயற்கை சீற்றத்தின்போது 54 பேர் உயிரிழந்தனர்.
தானே புயல்(2011)
ஜெல் புயலுக்கு அடுத்த ஆண்டே 2011 இல் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உருவானது தானே புயல். இந்த புயல் டிசம்பர் 28, 2011 அன்று மணிக்கு 165 கிமீ வேகத்தில் வீசும் காற்றுடன் கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கடலோரக் கரையைக் கடந்தது.
இந்த புயலின்போது, 48 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த புயல் கரையை கடக்கும்போது வீசிய பயங்கரமான சூறைகாற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு மண்ணில் சாய்ந்தன.
நீலம் புயல் (2012)
அக்டோபர் 28, 2012 அன்று வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் இருந்து உருவானது நிலம் புயல். இது அக்டோபர் 31 அன்று சூறாவளி புயலாக மாறியது. நிலாம் புயல் மணிக்கு 83 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மகாபலிபுரத்தைச் சுற்றி கரையைக் கடந்தது.
சூறாவளியின் கோரத்தாண்டவைத்தால் கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்திருந்தது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து தப்பிக்க, சுமார் 1,50,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
வர்தா புயல் (2016)
'மிகக் கடுமையான' வர்தா புயல் முதலில் அந்தமான் தீவு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது மற்றும் விரைவில் வலுவான புயலாக மாறியது. தமிழகத்தின் தலைநகரான சென்னையையே உலுக்கிய இந்த புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில், 38 பேர் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது. வர்தா புயலால் ஏற்பட்ட மொத்த பண இழப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
ஒக்கி புயல்
2017இல் இலங்கை அருகே வடக்கு இந்தியப்பெருங்கடலில் உருவான ஒக்கி புயல், கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தை புரட்டி போட்டது. எண்ணற்ற மரங்களையும், மின்கம்பங்களையும் சாய்த்த ஒக்கிபுயல், கன்னியாகுமரி மாவட்டத்தை முழுவதுமாக பாதித்தது. ஒக்கி புயலுக்கு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



Click it and Unblock the Notifications
