Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Cyclone Michaung: 'மைச்சாங் புயல்' பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Cyclone Michaung: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மைச்சாங் புயல் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், டிசம்பர் 03 முதல் கன மழை பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்க கடலில் டிசம்பர் 03 ஆம் தேதி மைச்சாங் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 04 ஆம் தேதி கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்ச் விடுத்துள்ளது.

மேலும் இந்த புயல் காரணமாக டிசம்பர் 03 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது. மேலும் டிசம்பர் 04 ஆம் தேதி மிகக் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் சென்னை மற்றும் மச்சிலிப்பட்டினத்தை குறிவைத்து வட தமிழக கடற்கரையை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புயல் டிசம்பர் 4 ஆம் தேதி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மைச்சாங் புயல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் நான்காவது வெப்பமண்ட சூறாவளியாகும். மேலும் 90-100 கிமீ வேகத்தில் சென்னையை நோக்கி வரும் இந்த சூறாவளி பெரிய சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அதை சமாளிக்க மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சூறாவளி என்றால் என்ன?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கூற்றுப்படி, வேகமான மற்றும் அடிக்கடி அழிவுகரமான காற்று சுழற்சியால் வேறுபடும் குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகளால் சூறாவளிகள் ஏற்படுகின்றன. சூறாவளிகள் பொதுவாக வன்முறை புயல்கள் மற்றும் மோசமான வானிலை ஆகியவற்றுடன் இருக்கும். சூறாவளியை புயல் என்றும் அழைப்பர்.
மைச்சாங் என்ற பெயர் எப்படி வந்தது?
மியான்மர் வழங்கிய பரிந்துரையின் படி, மைச்சாங் என்று இந்த சூறாவளிக்கு பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மைச்சாங் வலிமை மற்றும் நெகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த புயல் வங்காள விரிகுடாவில் உருவான நான்காவது சூறாவளி மற்றும் 2023-ல் இந்திய பெருங்கடலில் உருவாகும் 6 ஆவது புயலாக இருக்கும்.
மைச்சாங் புயல் எப்போது கரையை கடக்கிறது?
மைச்சாங் புயல் டிசம்பர் 04 ஆம் தேதி மாலை ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கும், வடதமிழகத்தின் சென்னைக்கும் இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையைக் கடக்கும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
மைச்சாங் புயல் கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களைப் பாதிக்குமா?
நிச்சயம் இல்லை. மைச்சாங் புயல் ஒடிசாவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்பட வாய்ப்பில்லை என்று புவனேஸ்வரில் உள்ள சிறப்பு நிவாரண ஆணையத்தின் அலுவலக அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











