Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
200 ஆண்டுகளாக சபிக்கப்பட்ட அரண்மனை... பின்னணியில் அரசர் செய்த துரோகம்...நம்ப முடியாத மர்மம் நிறைந்த கோட்டை...!
உலகில் தீர்க்க முடியாத மர்மங்கள் தெரிந்து கொள்ள முடியாத ரகசியங்களும் பல உள்ளன. இந்தியாவில் சில இடங்கள் அவற்றின் கவர்ச்சிகரமான அழகு அல்லது நீண்ட வரலாற்றுக்காக மட்டுமல்ல, அவற்றை சுற்றியுள்ள மர்மமான கதைகளுக்காகவும் புகழ் பெற்றவையாக உள்ளன. இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருப்பதால், மழைக்காலம் இந்தியர்களுக்கு நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும் காலகட்டமாக இருக்கிறது.
ஆனால் ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில், மழை ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இங்கு மழை பயம் மற்றும் மர்மம் நிறைந்த அனுபவங்களை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், மழை பெய்யும் போது, சபிக்கப்பட்ட ராஜாவின் அரண்மனை என்று அழைக்கப்படும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான கோட்டை மீண்டும் மீண்டும் மின்னலால் தாக்கப்படுகிறது, இந்த விசித்திரமான நிகழ்வு உள்ளூர் கவலையடையச் செய்கிறது மற்றும் வெளியூர் மக்களை கவர்ந்திழுக்கிறது.

சபிக்கப்பட்ட அரண்மனை
ராஞ்சியில் உள்ள பித்தோரியா கிராமத்தில், 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த மன்னர் ஜகத்பால் சிங்கிற்குச் சொந்தமான 100 அறைகள் கொண்ட ஒரு அற்புதமான அரண்மனை ஒரு காலத்தில் இருந்தது. ஒரு சாபத்தின் காரணமாக, இந்த அரண்மனை ஒவ்வொரு ஆண்டும் சக்திவாய்ந்த மின்னலால் தாக்கப்படுகிறது, இது படிப்படியாக இந்த பிரமாண்டமான கட்டமைப்பை சிதிலமடைந்த இடிபாடுகளாக மாற்றியுள்ளது.
மன்னர் ஜகத்பால் சிங்கின் மர்மமான அரண்மனை (கோட்டை) தொடர்ந்து மின்னலால் தாக்கப்படுகிறது. இடிபாடுகளாக இருந்தாலும், மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இந்த அரண்மை மின்னலால் தாக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, மன்னர் ஜகத்பால் சிங் நாட்டைக் காட்டிக் கொடுத்து பிரிட்டிஷ் வீரர்களுடன் சேர்ந்ததால் இந்த சாபம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னரின் துரோகம்
1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தின் போது, சுதந்திரப் போராட்ட வீரர் தாக்கூர் விஸ்வநாத் ஷாஹ்தியோவைப் பிடிக்க பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் வில்கின்சனுக்கு மன்னர் ஜகத்பால் சிங் உதவினார். இதன் விளைவாக, பிரிட்டிஷ் அதிகாரிகள் தாக்கூர் விஸ்வநாத் ஷாஹ்தியோவை கைது செய்து தூக்கிலிட்டனர். அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, தாக்கூர் விஸ்வநாத் ஷாஹ்தியோ, மன்னர் ஜகத்பால் சிங் செய்த துரோகத்திற்காக சபித்தார். அவரது ராஜ்ஜியம் வீழ்ச்சியடையும் என்றும், அவரது 100 அறைகள் கொண்ட அரண்மனை இடிந்து விழும் என்றும் சபித்து விட்டு தூக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, தாக்கூர் விஸ்வநாத் ஷாதேவின் சாபமே ஒவ்வொரு மழைக்காலத்திலும் மன்னர் ஜகத்பால் சிங்கின் கோட்டையில் மின்னல் தாக்குவதற்குக் காரணமாக உள்ளது, இது அவரது பிரமாண்டமான அரண்மனையை முற்றிலுமாக கொஞ்சம் கொஞ்சமாக அழித்தது. இருப்பினும், கோட்டையின் சில எச்சங்கள் இன்னும் எஞ்சியுள்ளன, இந்த தொடர்ச்சியான மின்னல் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்திற்கு சாட்சியாக அவை இருக்கின்றன.
கோட்டையின் சிறப்புகள்
மன்னர் ஜகத்பால் சிங்கின் கோட்டையின் ரகசியம் 200 ஆண்டுகளுக்கும் மேலானது என்று அப்பகுதியினர் கூறுகிறார்கள். சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இரண்டு மாடி அரண்மனை 100 க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டிருந்தது. இந்த அரண்மனை முகலாய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதால் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கோட்டையில் ராணிகள் குளிக்க தனி குளம் இருந்ததும் மேலும் பிரார்த்தனைக்காக ஒரு பெரிய சிவன் கோவிலும் இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக மன்னர் ஜகத்பால் சிங் மக்களைக் காட்டிக் கொடுத்ததாலும், தாக்கூர் விஸ்வநாத் ஷாதேவால் சபிக்கப்பட்டதாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, 100 அறைகள் கொண்ட அவரது பெரிய அரண்மனையை மின்னல் தாக்கத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக மன்னரின் முழு குடும்பமும் அரண்மனையும் அழிக்கப்பட்டன. இப்போது, பிரமாண்டமான அரண்மனையின் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
அறிவியல் காரணம்
இது தற்செயலாக நடந்ததா அல்லது கோட்டை உண்மையில் சபிக்கப்பட்டதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது, ஆனால் ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் மின்னல் மீண்டும் மீண்டும் தாக்குகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தலைநகர் ராஞ்சிக்கு அருகிலுள்ள பித்தோரியா பகுதியில் உள்ள மலைகள் மற்றும் உயரமான மரங்களின் அடியில் அதிக அளவு இரும்புத் தாது உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக, மின்னல் அந்த இடத்தில் அதிகமாக ஈர்க்கப்படுகிறது. இரும்பு ஒரு மின்னல் கடத்தி போல செயல்பட்டு, மின்னல் தாக்க ஒரு பாதையை வழங்குகிறது. இதனால்தான் அங்கு மின்னல் அடிக்கடி தாக்குகிறது என்று கூறப்படுகிறது, குறிப்பாக மழைக்காலங்களில், கோட்டை அடிக்கடி மின்னலால் தாக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
