Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சட்னி முதன்முதலில் உலகிற்கு எப்படி வந்தது? இந்தியாவில் முதலில் சட்னியை யார் தயாரித்தனர் தெரியுமா?
Chutney's History In Tamil: அன்றாட உணவின் ஓர் பகுதியாக சட்னி உள்ளது. காலையோ, மாலையோ அல்லது இரவிலோ ஏதோ ஓர் சட்னி உணவாக சமைக்கப்படுகிறது. சட்னி இல்லாமல் இந்திய உணவு முழுமையடையாது. ஏனெனில், சட்னி இல்லாமல் உணவில் சுவை முழுமையடையாது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். எளிதிலும் விரைவாகவும் சட்னியை தயாரிக்கலாம். குழந்தைகள் வெங்காயம்-தக்காளி சட்னியை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இன்றைய நாளில் டஜன் கணக்கான சட்னி வகைகள் உள்ளன.

மக்கள் தங்கள் விருப்பப்படி வகை வகையான சட்னியை தயார் செய்கிறார்கள். தக்காளி மற்றும் புதினா சட்னி போன்ற சட்னிகளை ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகள் செய்து உட்கொள்கின்றனர். இந்தியாவின் சில மாநிலங்களின் சட்னி தென்னிந்தியாவின் தேங்காய் சட்னியைப் போலவே மிகவும் பிரபலமானது. அதே நேரத்தில் உத்தரகாண்டின் பாங் கி சட்னி மிகவும் பிரபலமானது.
அதேபோல் குஜராத்தில் சுர்தி லோச்சோ சட்னி மிகுந்த ஆர்வத்துடன் உண்ணப்படுகிறது. ஆனால் எப்போது, யார் முதல் முறையாக சட்னி செய்திருப்பார்கள்? சாப்பிட்டு இருப்பார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த காரமான உணவைப் பற்றி யார் நினைத்திருப்பார்கள்? அதில் சட்னி மட்டும் ஏன் வைக்கப்பட்டது? போன்ற கேள்விகளோடு சட்னியின் வரலாற்றைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சட்னிகள் உலகிற்கு எப்படி வந்தது?
'சட்னி அல்லது சட்னி'யின் தோற்றம் பண்டைய இந்தியாவில் இருந்து அறியப்படுகிறது. அங்கு அது உணவின் முக்கிய பகுதியாக இருந்தது. முகலாயப் பேரரசர்கள் மத்திய ஆசியாவில் உள்ள தங்கள் தாயகத்திலிருந்து பல்வேறு வகையான சமையல் ரெசிபிக்களை தங்களுடன் கொண்டு வந்தபோது, முகலாய காலத்தில் இந்தியாவிற்கு இந்த சட்னி அறிமுகப்படுத்தப்பட்டது.
முகலாய சமையலறைகள், குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற கவர்ச்சியான பொருட்களால் செய்யப்பட்ட பரந்த அளவிலான சட்னிகளை உள்ளடக்கிய விரிவான விருந்துகளுக்கு பெயர் பெற்றன.
சட்னி எப்படி உருவானது?
ஆங்கிலோ-இந்திய உணவுகளில், புளிப்பு ஆப்பிள்கள், ருபார்ப் ஊறுகாய் போன்ற புளிப்பு பழங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், ஆங்கிலேயர்கள் வினிகரில் ஊறவைத்து பழங்களை பேஸ்ட்டாக்கி சாப்பிட்டனர். இது பின்னர் சட்னி என்று பெயரிடப்பட்டது. பின்னர், காரமான பழங்கள் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டன.
1780களில் இங்கிலாந்தில் சட்னி மிகவும் பிரபலமாகிய காலம் ஒன்று இருந்தது. முன்னதாக, 1493 ஆம் ஆண்டில் டியாகோ அல்வாரெஸ் சான்கா அமெரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு மிளகாய்களை மீண்டும் கொண்டு வந்தார். அவர் கொலம்பஸுடன் ஒரு பயணத்திற்கு சென்றார். அதன் மருத்துவ குணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சட்னி பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டது.
முதலில் சட்னி ஷாஜகானுக்காக செய்யப்பட்டது
சட்னி என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். ஷாஜகானின் ஆட்சியின் போது அவர் நோய்வாய்ப்பட்டபோது சட்னி முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஷாஜகானின் ஹக்கீம் தனது பவாரிக்கு சுவையான மற்றும் காரமான ஒன்றை ஊட்டுமாறு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, உணவு எளிதில் ஜீரணமாகும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதை தொடர்ந்து, சட்னி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எந்த சட்னி முதலில் செய்யப்பட்டது?
புதினா மற்றும் புளி சட்னிதான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, ஷாஜகானுக்கு இனிப்பு பேரீச்சம் பழ சட்னி செய்யப்பட்டது. அன்றிலிருந்து, இந்தியாவில் சட்னியை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று பழம் முதல் பூ வரை நுற்றுக்கணக்கான சட்னிகள் தயாரிக்கப்படுகிறது.
சட்னி வகைகள்
பல வகையான சட்னிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. காரம், இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடன் பெரும்பலான சட்னிகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் கடலை சட்னி, இனிப்பு மாங்காய் சட்னி, புளி சட்னி, வெல்லம் சட்னி, புதினா சட்னி, வெங்காய சட்னி, தக்காளி மிளகாய் சட்னி போன்றவை மிகவும் பிரபலமான சில சட்னிகள்.
இந்தியாவில் சட்னி எங்கிருந்து கிடைக்கிறது?
தேங்காய் சட்னி என்பது தென்னிந்திய சட்னியின் பாரம்பரிய மாறுபாடு ஆகும். இது பெரும்பாலும் புதிய தேங்காய், மிளகாய், சீரகம், இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தேங்காய் சட்னி ரெசிபிகள் தோசைகள், இட்லிகள், வெண் பொங்கல் மற்றும் உப்மா போன்ற தென்னிந்திய காலை உணவுகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications













