Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Chandra Grahan 2025: ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம்.. இதோ உங்களுக்கான சில போட்டோக்களும்.. வீடியோக்களும்...
Chandra Grahan 2025: இந்த ஆண்டின் செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழும் இரண்டாவது சந்திர கிரகணம் ஒரு முழு சந்திர கிரகணமாக இருப்பதோடு, சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் இரத்த நிலவு என்றும் அழைக்கப்படும். இந்த அரிய வான நிகழ்வின் போது, பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் நேரடியாகச் சென்று, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலைப் பரப்பி, சிவப்பு-ஆரஞ்சு நிற ஒளியைக் கொடுக்கும்.
ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் பல நாடுகளில் இந்த கிரகணம் முழுமையாகத் தெரியும். அதே நேரத்தில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளும் இந்த அரிய நிகழ்வின் ஒரு பகுதியைப் பார்க்கக்கூடும். முக்கியமாக இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.

ஏன் இரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது?
பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் அதன் நிழலைப் பரப்பும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் பூமியின் அம்ப்ரல் நிழலை அதாவது இருண்ட உள் பகுதியை கடந்து செல்வதால், அது மங்கலாகி சிவப்பு நிறமாக மாறும். 'இரத்த நிலவு' விளைவு என்று அழைக்கப்படும் இந்த சிவப்பு நிறம், பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்லும் சூரிய ஒளியின் குறுகிய நீல அலைநீளங்களை சிதறடிக்கும்போது ரேலீ சிதறலின் விளைவாகும், அதே நேரத்தில் நீண்ட சிவப்பு அலைநீளங்கள் சந்திரனை நோக்கி வளைந்து, கருஞ்சிவப்பு நிறத்தில் அதனை ஒளிரச் செய்கிறது.
இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்கலாம்?
இந்த கிரகணம், இரவு நேரத்தில் வானம் தெளிவாக உள்ளபோது இந்தியாவில் எங்கிருந்தும் பார்க்கலாம். சொல்லப்போனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பரவலாக மற்றும் தெளிவாக தெரியும் சந்திர கிரகணங்களில் இதுவும் ஒன்றாகும். இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியாது, ஆனால் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85% பேர் அதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும். இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம். இருப்பினும் ஒருசில நகரங்களில் இது மிகவும் தெளிவாக தெரியும்.
வட இந்தியா: டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ
மேற்கு இந்தியா: மும்பை, அகமதாபாத், புனே
தென் இந்தியா: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி
கிழக்கு இந்தியா: கொல்கத்தா, புவனேஸ்வர், கௌஹாத்தி
மத்திய இந்தியா: போபால், நாக்பூர், ராய்ப்பூர்
சந்திரன் வானத்தில் மிகவும் உயரமாக இருப்பதால், அதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இரத்த நிலவை பார்க்க சிறந்த இடங்கள் என்றால், அது மொட்டை மாடிகள், திறந்தவெளி வயல்கள் அல்லது நகர விளக்குகளிலிருந்து விலகி இருக்கும் பூங்காக்கள் போன்றவையாகும்.
இந்தியாவில் முழு சந்திர கிரகணத்தின் நேரம்
இந்த அதிசய முழு சந்திர கிரகணம் முழு நிலை 82 நிமிடங்கள் நீடிக்கும், இது கடந்த பத்தாண்டுகளில் நீண்ட நேரம் நீடிக்கும் மிகவும் கண்கவர் சந்திர கிரகணங்களில் ஒன்றாகும்.
கிரகணத்தின் ஆரம்பம்: இரவு 8:58 PM (2025 செப்டம்பர் 07)
இரத்த நிலவு நிலை: இரவு 11:00 முதல் அதிகாலை 12:22
கிரகணத்தின் முடிவு: அதிகாலை 2:25 (2025 செப்டம்பர் 08)
இந்தியாவில் இரத்த நிலவை எப்படி பார்க்கலாம்?
- சூரிய கிரகணங்களைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் அதற்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை.
- சந்திரனில் இருக்கும் பள்ளங்கள் மற்றும் சிவப்பு சாய்வு போன்றவற்றை பார்க்க தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
