Latest Updates
-
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
Chandra Grahan 2025: ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம்.. இதோ உங்களுக்கான சில போட்டோக்களும்.. வீடியோக்களும்...
Chandra Grahan 2025: இந்த ஆண்டின் செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழும் இரண்டாவது சந்திர கிரகணம் ஒரு முழு சந்திர கிரகணமாக இருப்பதோடு, சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் இரத்த நிலவு என்றும் அழைக்கப்படும். இந்த அரிய வான நிகழ்வின் போது, பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் நேரடியாகச் சென்று, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலைப் பரப்பி, சிவப்பு-ஆரஞ்சு நிற ஒளியைக் கொடுக்கும்.
ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் பல நாடுகளில் இந்த கிரகணம் முழுமையாகத் தெரியும். அதே நேரத்தில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளும் இந்த அரிய நிகழ்வின் ஒரு பகுதியைப் பார்க்கக்கூடும். முக்கியமாக இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.

ஏன் இரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது?
பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் அதன் நிழலைப் பரப்பும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் பூமியின் அம்ப்ரல் நிழலை அதாவது இருண்ட உள் பகுதியை கடந்து செல்வதால், அது மங்கலாகி சிவப்பு நிறமாக மாறும். 'இரத்த நிலவு' விளைவு என்று அழைக்கப்படும் இந்த சிவப்பு நிறம், பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்லும் சூரிய ஒளியின் குறுகிய நீல அலைநீளங்களை சிதறடிக்கும்போது ரேலீ சிதறலின் விளைவாகும், அதே நேரத்தில் நீண்ட சிவப்பு அலைநீளங்கள் சந்திரனை நோக்கி வளைந்து, கருஞ்சிவப்பு நிறத்தில் அதனை ஒளிரச் செய்கிறது.
இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்கலாம்?
இந்த கிரகணம், இரவு நேரத்தில் வானம் தெளிவாக உள்ளபோது இந்தியாவில் எங்கிருந்தும் பார்க்கலாம். சொல்லப்போனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பரவலாக மற்றும் தெளிவாக தெரியும் சந்திர கிரகணங்களில் இதுவும் ஒன்றாகும். இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியாது, ஆனால் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85% பேர் அதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும். இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம். இருப்பினும் ஒருசில நகரங்களில் இது மிகவும் தெளிவாக தெரியும்.
வட இந்தியா: டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ
மேற்கு இந்தியா: மும்பை, அகமதாபாத், புனே
தென் இந்தியா: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி
கிழக்கு இந்தியா: கொல்கத்தா, புவனேஸ்வர், கௌஹாத்தி
மத்திய இந்தியா: போபால், நாக்பூர், ராய்ப்பூர்
சந்திரன் வானத்தில் மிகவும் உயரமாக இருப்பதால், அதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இரத்த நிலவை பார்க்க சிறந்த இடங்கள் என்றால், அது மொட்டை மாடிகள், திறந்தவெளி வயல்கள் அல்லது நகர விளக்குகளிலிருந்து விலகி இருக்கும் பூங்காக்கள் போன்றவையாகும்.
இந்தியாவில் முழு சந்திர கிரகணத்தின் நேரம்
இந்த அதிசய முழு சந்திர கிரகணம் முழு நிலை 82 நிமிடங்கள் நீடிக்கும், இது கடந்த பத்தாண்டுகளில் நீண்ட நேரம் நீடிக்கும் மிகவும் கண்கவர் சந்திர கிரகணங்களில் ஒன்றாகும்.
கிரகணத்தின் ஆரம்பம்: இரவு 8:58 PM (2025 செப்டம்பர் 07)
இரத்த நிலவு நிலை: இரவு 11:00 முதல் அதிகாலை 12:22
கிரகணத்தின் முடிவு: அதிகாலை 2:25 (2025 செப்டம்பர் 08)
இந்தியாவில் இரத்த நிலவை எப்படி பார்க்கலாம்?
- சூரிய கிரகணங்களைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் அதற்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை.
- சந்திரனில் இருக்கும் பள்ளங்கள் மற்றும் சிவப்பு சாய்வு போன்றவற்றை பார்க்க தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications












