Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களில் ஆண்களால் பெண்கள் கிட்ட கூட வர முடியாதாம்... அவ்வளவு வலிமையானவங்களாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞரான சாணக்கியர் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி ஆழமான அறிவைக் கொண்டிருந்தவர். தன் அறிவாலும், கொள்கைகளாலும் வரலாற்றின் போக்கையே மாற்றியமைக்கும் திறமையை அவர் கொண்டிருந்தார். சாணக்கியர் தனது கொள்கைகளால் ஒரு சாதாரண சிறுவனை சந்திரகுப்தனை மதகாவின் பேரரசனாக்கினார். தனது கொள்கைகள் மூலம் ஒரு தனிமனிதன் வெற்றி பெறுவதற்கான வழிகளை மட்டும் காட்டாமல், அதன் மூலம் சமுதாய நலனுக்காகவும் பாடுபட்டார்.

அவரது தந்திரங்களும், அறிவுரைகளும் இன்றும் உலகப் புகழ் பெற்றவை. தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, வணிகம், உறவுகள், நட்பு மற்றும் எதிரி போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தனது கருத்துக்களை சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கிய நீதியில், பெண்களின் நற்பண்புகள் பற்றிய அற்புதமான அறிவுரைகள் உள்ளது. அதன்படி சில விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் முன்னிலையில் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நான்கு மடங்கு அறிவு
பெண்களின் முதல் சிறந்த குணம் அவர்களின் புத்திசாலித்தனம். சாணக்கியரின் கொள்கைப்படி ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். அவர்கள் ஆண்களை விட புத்திசாலிகள். சில சந்தர்ப்பங்களில் அவர்களின் புத்திசாலித்தனம் பல வழிகளில் ஆண்களை விட சிறப்பாக செயல்படுகிறது.
அவர்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் அச்சமின்றி எதிர்கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார்கள். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் சவால்களுக்கு அஞ்ச மாட்டார்கள். பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் எளிதாக வெளியேறுகிறார்கள்.
உடலுறவில் எட்டு மடங்கு ஆர்வம்
சாணக்கிய நீ தியில் 'காமோஸ்தகுன் உச்யதே' என்றொரு வார்த்தை உண்டு. அதாவது செக்ஸ் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்கள் எட்டு மடங்கு பாலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களை விட பெண்களின் உடலுறவின் சக்தி அதிகம் என்கிறார். இயற்கை அவர்களுக்கு தீவிர உடலுறவு ஆர்வம், அதிக தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொடுத்துள்ளது.
பசி
ஆண்களை விட பெண்கள் பல மடங்கு பசியை அனுபவிக்கிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் ஆண்களை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள். பெண்களின் உடல் அமைப்பைப் பொறுத்து, அவர்களுக்கு அதிக கலோரிகள் தேவை. இதன் காரணமாக அவர்கள் நிறைய சாப்பிட வேண்டும்.
இரக்கம்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நெருக்கமாகி அவர்களை கவனித்துக்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இன்பம், துன்பம் போன்றவற்றில் ஆதரவளிப்பதில் பெண்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர். ஒரு பெண் வேண்டுமானால் குடும்பத்தின் முழு பாரத்தையும் கூட சுமப்பார்கள்.
ஆறு மடங்கு தைரியம்
ஆண்கள் பொதுவாக பெண்களை விட தைரியமானவர்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் சாணக்கிய நீதி இதற்கு நேர்மாறாக கூறுகிறது. சாணக்கியரின் கொள்கைப்படி ஆண்களை விட பெண்கள் ஆறு மடங்கு தைரியசாலிகள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களைப் போல பீதி அடைய மாட்டார்கள். எனவே அவர்கள் சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். மன அழுத்த சூழ்நிலைகளை சமாளிப்பதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். தைரியமாக இருக்கும்போது அவர்கள் யாரையும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
