Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 நபரை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை...!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. அதேபோல இந்த 5 பேரையும் தூக்கத்தில் இருந்து எழுப்பவே கூடாது என்கிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த 5 நபர்களை நாம் தூக்கத்திலிருந்து எழுப்பக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களை எழுப்புவது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் வழிநடத்துகின்றன. சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை நடத்த பல முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.

ஒருவருக்கு நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தை யார் விளக்குகிறார்கள் என்கிறார் சாணக்கியர். தூக்கத்திலிருந்து எழுபிப்க்கக்கூடாத 5 பேரை சாணக்கியர் குறிப்பிடுகிறார். இந்த 5 பேரையும் தூக்கத்தில் இருந்து எழுப்பினால் அது நம் உயிருக்கே ஆபத்து என்கிறார் சாணக்கியர்.
குழந்தை
குழந்தைகள் முழுமையடையாத தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர்களின் மனநிலை தொந்தரவு செய்யப்படும். அதனால் அவர்கள் நாள் முழுவதும் அழுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அரை தூக்கம் காரணமாக அதிக சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளைக் கையாள்வது கடினம், எனவே அவர்களை ஒருபோதும் அரை தூக்கத்திலிருந்து எழுப்பக்கூடாது. ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இப்படி செய்வது நல்லதல்ல என்று கூறப்படுகிறது.
ஊன் உண்ணும் விலங்குகள்
ஆபத்தான விலங்கு தூங்கும் போது அதை எழுப்பவோ தொந்தரவு செய்யவோ முயற்சிக்காதீர்கள். ஒரு ஆபத்தான மிருகம் கோபத்தில் ஒருவரைத் தாக்கலாம், அதனால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஒரு அறிமுகமில்லாத நாயை தூக்கத்தில் இருந்து எழுப்புவது கூட உங்களை சிக்கலில் மாட்டிவிடும் என்பதால், அவர்களின் தூக்கத்தை தொந்தரவு செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிங்கம்
தூங்கும் சிங்கத்தை எழுப்பும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், ஏனெனில் அது உங்களுக்கு ஆபத்தானதாக மாறும். தூங்கும் சிங்கத்தை தொந்தரவு செய்வது பிரச்சனைக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களைப் பாதுகாத்துக் கொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம் என்கிறார் ஆச்சார்யா சாணக்கியர்.
முட்டாள்கள்
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு முட்டாளை தூக்கத்திலிருந்து எழுப்புவது சிக்கலை அழைப்பதாகும். ஒரு முட்டாளுக்கு நிலைமையை விளக்குவது காது கேளாதவனுக்கு வீணை வாசிப்பது போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு முட்டாளை அவரது நன்மைக்காக தூக்கத்திலிருந்து எழுப்பினாலும், அவர் உன்னைத் தவறாகத்தான் எண்ணுவார்.
அரசன்
சாணக்கியரின் கூற்றுப்படி, பழங்காலத்தில் ஒரு அரசனை தூக்கத்திலிருந்து எழுப்புவது குற்றமாகக் கருதப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், ஒரு பெரிய அதிகாரியோ அல்லது ஒரு ஆட்சியாளரோ தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவருடைய கோபத்திற்கு இரையாகலாம். எனவே அரசர்களை தூக்கத்திலிருந்து எழுப்பக்கூடாது என்று சாணக்கியர் தனது நீதியில் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications












