Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஆண்கள் இந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்யக்கூடாதாம்...!
Chanakya Niti: ஒரு ஆணின் வாழ்க்கையை முழுமையாக்குபவர் அவருடைய மனைவிதான். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவருக்காகவும், குடும்பத்திற்காகவும் வாழ வேண்டும் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறுகிறார். எனவே திருமணமான பெண் செய்யும் ஒவ்வொன்றும் அதன் சொந்த அர்த்தம் இருப்பதாகஅவர்களின் குடும்பத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மனைவி நல்லொழுக்கமுள்ளவராக இருந்தால், அவர் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை என்றென்றும் பராமரிக்க முடியும் என்பது சாணக்கியரின் அறிவுரை. ஆனால் மனைவியிடம் அப்படிப்பட்ட ஒழுக்கம் இல்லையென்றால் அவரால் குடும்பத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது, அவர் குடும்பத்துக்கு ஏற்றவர் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு குடும்பத்தின் முழு மகிழ்ச்சிக்கும் மனைவியே பொறுப்பு என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் தெளிவுபடுத்துகிறார். தோல்விகளை வெற்றியாக மாற்றவும், ஒரு நபரை தவறான பாதையில் வழிநடத்தவும் பெண்களால் முடியும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியர் கூறும் பெண்களின் மோசமான குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேச்சில் கட்டுப்பாடு இல்லாதவர்கள்
கோபமாக இருக்கும்போது எதையும் கத்தும் பெண்கள், பேச்சில் கட்டுப்பாடு இல்லாமல் குடும்பத்தின் நிம்மதியைக் கெடுப்பார்கள் என்கிறார் சாணக்கியர். இது குடும்பத்தில் உள்ள அமைதியையும், மகிழ்ச்சியையும் குழைப்பார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அடிக்கடி தீங்கு விளைவிப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
கெட்ட வார்த்தைகள் பேசுபவர்கள்
பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது குடும்பத்திற்கு நல்லதல்ல. இது குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் அத்தகைய பெண்கள் அப்படி பேசும்போது மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள், அவர்களின் மனம் கலங்குகிறதா என்பதைப் புரிந்துகொள்வதில்லை.
குழந்தைகள் முன்னிலையில் கூட பலர் பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இது அவர்கள் வாழ்க்கையில் அதிக சவால்களை உருவாக்கும். கட்டுப்பாடு இல்லாமல் இதுபோன்ற செயல்களைச் செய்யும் பெண்களை குடும்பத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
முன்கோபக்காரர்கள்
கோபம் என்பது அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சகஜமான உணர்வு. பெரும்பாலும் அதீதமாக கோபப்படும் ஒரு பெண்மணி அவர்கள் குடும்பத்தில் நல்ல சூழ்நிலைகளை உருவாக்குவது இல்லை மற்றும் குழந்தைகளுக்கு நற்குணங்களைக் கற்றுத்தர மாட்டார்கள். மேலும் அவர்களின் இந்த குணம் குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சியையும், சமாதான குணத்தையும் தாக்குகிறது. இப்படிக் அதிக கோபமுள்ள மனைவியை விட்டு விலகுவதே நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆடம்பர குணம் கொண்டவர்கள்
கணவரின் வருமானம் தெரியாமல் செலவு செய்யும் மனைவிகளும் ஏராளம். நீங்கள் வருமானத்தை கவனமாக நிர்வகிக்கவில்லை என்றால், உங்கள் குடும்பத்தின் நிதிநிலையே ஆட்டம் கண்டுவிடும். இது உங்கள் எதிர்கால வாழ்க்கையிலும் சவால்களை ஏற்படுத்துகிறது. எனவே இந்த விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். குடும்பத்தில் இருந்து இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானது.
நல்ல மனைவிக்கான குணங்கள்
சாணகியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல மனைவி எப்போதும் தனது செயல்களிலும் வார்த்தைகளிலும் மென்மையையும், தூய்மையையும் கடைபிடிக்க வேண்டும். வார்த்தைகள் மற்றும் செயல்களின் விளைவுகள் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தை நன்றாக வழிநடத்த வேண்டும். மேலும் கணவரை எந்த சூழ்நிலையிலும் நேசிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications












