சாணக்கிய நீதி படி இந்த 4 வகை மனிதர்களை நம்பினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை

Chanakya Niti: கௌடில்யர் என்று அழைக்கப்படும் சாணக்கியர், பண்டைய இந்தியாவின் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தத்துவஞானியாகவும், பொருளாதார நிபுணராகவும், ராஜதந்திரியாகவும் திகழ்ந்தார். அவர் தனது போதனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் தனது 'சாணக்கிய நீதி' எனும் நூலில் தொகுத்துள்ளார். சாணக்கிய நீதி மனித நடத்தை, உறவுகள் மற்றும் நிர்வாகம் குறித்த ஆழ்ந்த ஞானத்தை வழங்குகின்றன.

Chanakya Niti Types Of Friends You Should Never Trust in Life

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பல போதனைகளுக்கு மத்தியில், நண்பர்களாகத் தோன்றினாலும் உண்மையில் தீங்கு விளைவிக்கக்கூடிய சில ஆபத்தான மனிதர்களைப் பற்றி சாணக்கியர் எச்சரித்துள்ளார். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு வாழ்க்கையில் தவிர்ப்பது, வாழ்க்கையில் அமைதி, வெற்றி மற்றும் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மிகவும் அவசியமாகும். இந்த பதிவில் சாணக்கியர் ஒருபோதும் நம்பக்கூடாதென்று அறிவுறுத்தும் ஆபத்தான நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

சுயநலமான நண்பர்கள்

தங்கள் சுயலாபத்திற்காக மட்டுமே நெருக்கமாக இருக்கும் நண்பர்களிடமிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். இவர்கள் வெளித்தோற்றத்திற்கு ஆதரவளிப்பவர்களைப் போலத் தோன்றலாம்; ஆனால், உங்களிடமிருந்து அவர்களுக்கு எந்த ஆதரவும், பலனும் கிடைக்காது என்ற நிலை வரும்போது அடுத்த நொடியே இவர்கள் மறைந்துவிடுவார்கள். இத்தகைய நட்புகள் பரிவர்த்தனை சார்ந்தவை. அந்த நட்பில் உணர்வுபூர்வமான ஆழம் இருப்பதில்லை. காலப்போக்கில், அவை உண்மையான தோழமையை வழங்காமலேயே, உங்கள் ஆற்றலையும் வளங்களையும் உறிஞ்சிவிடக்கூடும்.

பொறாமை கொண்ட நண்பர்கள்

உங்கள் வெற்றி, மகிழ்ச்சி அல்லது உறவுகள் மீது பொறாமை கொள்ளும் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சாணக்கிய அறிவுறுத்துகிறார். அவர்கள் வெளித்தோற்றத்தில் புன்னகைத்தாலும், அவர்களுடைய பொறாமை உங்களுக்கேத் தெரியாமல் தவறான அல்லது எதிர்மறை விளைவுகளுக்கு வழிவகுக்கும். நட்புகளில் எழும் பொறாமை, நச்சுத்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட நண்பர்கள் உங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, உங்கள் தன்னம்பிக்கையைக் குலைத்து, உங்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவார்கள்.

வதந்தி பரப்பும் நண்பர்கள்

அளவுக்கு அதிகமாகப் புறம் பேசும் நண்பர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார். அவர்கள் தங்கள் வதந்திகளால் மகிழ்விக்கக்கூடும் என்றாலும், மற்றவர்களின் இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் அவர்களின் பழக்கம், நம்பகத்தன்மை இல்லாததையே காட்டுகிறது. அவர்கள் மற்றவர்களின் ரகசியங்களை உங்களிடம் சொல்வது போல உங்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது, ஏனெனில் அவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் உங்களின் எதிரியாக மாறலாம்.

சந்தர்ப்பவாதி நண்பர்கள்

சந்தர்ப்பவாத நண்பர்கள் என்போர், தங்களுக்குப் பயன் இருக்கும்போது மட்டுமே உங்களுடன் இணைந்திருப்பவர்களும், இக்கட்டான காலங்களில் பெரும்பாலும் உங்களைக் கைவிட்டுச் செல்பவர்களாக இருப்பார்கள். சாணக்கியர் இப்படிப்பட்ட நண்பர்களை நெருப்புடன் ஒப்பிடுகிறார், தேவைப்படும்போது இவர்கள் பயனுள்ளவர்களாகவும், கட்டுப்பாடற்றுப் போகும்போது ஆபத்தானவர்களாகவும் விளங்குகிறார்கள். சந்தர்ப்பவாத நண்பர்களிடம் ஒருபோதும் விசுவாசமும், நேர்மையும் இருக்காது. அவர்களை நம்புவது ஏமாற்றத்திற்கே வழிவகுக்கும். குறிப்பாக, வாழ்க்கையின் நெருக்கடியான தருணங்களில் அவர்கள் உங்களை விட்டு சென்று விடுவார்கள்.

Story first published: Wednesday, May 27, 2026, 11:57 [IST]
Desktop Bottom Promotion