சாணக்கிய நீதி படி இந்த 2 குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் பெரிய மரியாதையை பெறுவார்களாம்...!

Chanakya Niti: இந்தியாவின் சிறந்த தத்துவஞானியும் அறிஞருமான சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான அனைத்து அம்சங்களையும் பற்றி விளக்கியுள்ளார். எல்லோரும் மற்றவர்களால் மதிக்கப்படவும் கௌரவிக்கப்படவும் விரும்பினாலும், எல்லோரும் அனைவராலும் பாராட்டப்படுபவராக இருப்பதில்லை.

வாழ்க்கையில் அனைவராலும் மதிக்கப்படுவதே அதுதான் சமூகத்தில் ஒருவரின் வெற்றியாகும். இந்த வெற்றியை அடைவதற்கான அறிவு மற்றும் ஆலோசனைகள் சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சாணக்கியர் இரண்டு முக்கிய வழிகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று பணிவு மற்றொன்று சுய ஒழுக்கம் மூலம். இவை எப்படி ஒருவரை வெற்றிகரமானவராக மாற்றும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Chanakya Niti Two Essential Qualities To Get Respect in Society in Tamil

பணிவு மற்றும் ஒழுக்கம்

மற்றவர்களின் மரியாதையைப் பெறுவதில் பணிவு மிகவும் முக்கியமானது என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார், உண்மையான மரியாதை ஆணவத்தால் அல்ல, பணிவின் மூலம் மட்டுமே பெறப்படுகிறது என்ற சாணக்கியர் வலியுறுத்தினார். மரியாதை பெறுவதற்கு சுய ஒழுக்கத்தை ஒரு திறவுகோலாகவும் அவர் பார்க்கிறார்.

சாணக்கிய நீதி மூலம், சுயக்கட்டுப்பாடு தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூகத்தில் அந்தஸ்தையும் மதிப்பையும் பெறுவதற்கும் மிக முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார். ஆசைகளையும், தூண்டுதல்களையும் கட்டுப்படுத்த முடிவதன் மூலம், தனிநபர்கள் சகாக்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற முடியும். இந்த இரண்டு குணங்களும் ஒருவர் மற்றவர்களின் விருப்பங்களையும், அன்பையும், மரியாதையையும் பெற எவ்வாறு உதவுகின்றன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பணிவு ஒருவரின் பலம்

பணிவை ஒருவரின் சிறந்த குணங்களில் ஒன்றாக சாணக்கியர் மதிக்கிறார். பணிவுள்ள நபர்கள் மற்றவர்களின் அன்பையும் மரியாதையையும் பெறுவார்கள். ஏனென்றால், ஒருவர் தனது சொந்த சாதனைகளைப் பற்றி தற்பெருமை பேசாமல், மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதிலும் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்தினால் அவர் அனைவராலும் மதிக்கப்படுவார். பணிவு என்ற தரம் மற்றவர்களுடன் வெளிப்படையானத் தொடர்பு மற்றும் பரஸ்பர மரியாதையை எளிதாக்குகிறது, இது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணியிடத்திலும் வெற்றிக்கு அவசியம்.

பணிவு பற்றிய சாணக்கியரின் அறிவுரைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சியை அனுபவிப்பார்கள். எல்லோரும் பணிவானவர்களை மதிப்பதால், மற்றவர்கள் தாழ்மையானவர்களிடம் ஒரு சிறப்பு பாசத்தை உணர்கிறார்கள். பணிவு என்பது ஒரு சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படும் சிறப்பு குணமாகும்.

சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம்

சுய ஒழுக்கம் என்பது ஒருவரின் சொந்த விருப்பங்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன் ஆகும். இந்த வகையான சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் ஒரு நபரை சிறந்த முடிவுகளை எடுக்க வழிவகுக்கும் என்று சாணக்கியர் நம்புகிறார். இந்த குணம் இலக்குகளில் கவனம் செலுத்தவும் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்யவும் உதவுகிறது. ஒழுக்கம் ஒரு நபர் தனிப்பட்ட வெற்றியை அடைவதற்கு மட்டுமல்லாமல், சமூகத்திலிருந்து அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற உதவும்.

சுய ஒழுக்கம் உள்ளவர்களை அனைவரும் மதிப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளில் கூட மற்றவர்களிடம் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், சுய ஒழுக்கம் உள்ள நபர்கள் மற்றவர்களின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுகிறார்கள், இது தலைமைப் பொறுப்பில் இருக்க மிகவும் அவசியமானது. சுய கட்டுப்பாட்டுப் பழக்கத்தை வளர்ப்பதற்கு தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதும், கட்டமைக்கப்பட்ட நடைமுறைகளை உருவாக்குவதும் அவசியம். ஒருவரின் சொந்த செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் தொடர்ந்து மதிப்பீடு செய்வது இந்தப் பண்பை மேலும் வலுப்படுத்தும்.

Story first published: Friday, March 21, 2025, 6:00 [IST]
Desktop Bottom Promotion