Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்களை பாலோ பண்றவங்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் கூற்றுப்படி, பணம் மற்றும் பதவியால் மட்டுமே யாரும் வெற்றி பெறுவதில்லை. சமுதாயத்தில் முன்மாதிரியாகவும், மரியாதைக்குரியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே வெற்றிகரமானவர்களாக மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர்.
சாணக்கியரின் இந்த கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பவர் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வு பெறுவார் என்பது நம்பிக்கை. இன்றைய அவசர உலகத்தில் பணம் ஒரு நல்ல வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணத்தைப் பற்றிய சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

இவற்றை ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. சாணக்கிய நீதியைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பணத்தில் எந்த பிரச்சனையும் வராது.
சிந்திக்காமல் செலவு செய்யக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தைத் தண்ணீரைப் போல செலவழிப்பவர்கள் மற்றும் பணத்தை சேமிக்காதவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கஷ்ட காலத்தில் மோசமான துன்பங்களை சந்திப்பார்கள். ஆனால் கஷ்ட காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பவர்கள் புத்திசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்காக பணத்தை யோசிக்காமல் செலவு செய்வது நல்லதல்ல என்று சாணக்கியர் கூறுகிறார்.
சரியான இடத்தில் வசிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தீய செயல்களால் சம்பாதித்த பணம் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது, மேலும் பணத்திற்கு அடிமையாக இருக்கக் கூடாது. சாணக்கியரின் கொள்கையின்படி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய இடத்தில் வசிப்பதன் மூலம், ஒரு நபர் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்.
நல்ல செயல்கள் மூலம் சம்பாதிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒழுக்கக்கேடான வழிகளில் சம்பாதித்த பணத்தின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் மட்டுமே. பதினொன்றாவது வருடத்திற்குப் பிறகு, அத்தகைய செல்வம் அழியத் தொடங்கும், அது உங்களுடைய நிம்மதியையும் அழித்துவிடும். பணம் எப்போதும் சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும். தவறாக சம்பாதித்த பணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.
மற்றவர்களை மதிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, மக்கள் உங்களை மதிக்க வேண்டும் என்றால், நீங்கள் மற்றவர்களை மதிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களை மதிக்கும்போதுதான் அவர்கள் உங்களை மதிப்பார்கள். பிறருக்கு மரியாதை கொடுப்பவர்களுக்குத்தான் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். பிறரை அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி காண்பவர்களை சமூகம் ஒருபோதும் மதிக்காது.
லக்ஷ்மி தேவியை வழிபட வேண்டும்
சாணக்கியரின் கொள்கைப்படி, மக்கள் சண்டையிடும் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார். லட்சுமி தேவி அமைதியான சூழ்நிலை இல்லாத வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுவார். அத்தகைய வீடுகளில் பணமும் இருப்பதில்லை. மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வீட்டில் மட்டுமே லட்சுமி தேவி குடியிருப்பார்.
செல்வத்தை நினைத்து தற்பெருமை கொள்ள கூடாது
எல்லோருக்கும் பண ஆசை இருக்கும். ஆனால் பணத்தின் மீது மோகம் இருக்க கூடாது என்கிறார் சாணக்கியர். அதாவது, பணம் சம்பாதிப்பதில் ஒருவருக்கும் எப்பொழுதும் வெறி இருக்கக் கூடாது. ஏனென்றால் பணம் கிடைத்தால் மக்களுக்கு ஆணவம் அதிகரிக்கும். தன்னிடம் இருக்கும் செல்வத்தை நினைத்து பெருமை கொள்பவர்களிடம் இருக்கும் பணம் விரைவில் கரையும்.



Click it and Unblock the Notifications
