Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
சாணக்கிய நீதி படி இந்த 6 தவறுகளை செய்யும் தம்பதிகளின் திருமணம் விரைவில் விவகாரத்தில் முடிந்து விடுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தவிர மனித வாழ்வின் பல அம்சங்களைப் பற்றி சாணக்கியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகள் மனித வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இன்றும் அவரின் அறிவுரைகள் உலகம் முழுவதும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றினால் வாழ்க்கையில் இருந்து பல பிரச்சனைகள் நீங்கும்.

சாணக்கிய நீதியில் திருமண வாழ்க்கையைப் பற்றிய பல விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். திருமண வாழ்வில் சாணக்கியரின் கொள்கைகளை கடைப்பிடித்தால் மகிழ்ச்சியான திருமணத்தை அனுபவிக்க முடியும். திருமண வாழ்க்கையை அழிக்கும் சில தவறுகளை பற்றி சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
கணவன்-மனைவி செய்யும் இந்த சிறு தவறுகள் அவர்களது உறவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிண்டல் மற்றும் கேலி
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் சூரியனும் நிழலும் போன்றவை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். கணவனும் மனைவியும் எந்த விஷயத்திற்காகவும் ஒருவரை ஒருவர் கேலி செய்யக்கூடாது.
நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே காரணம் என்று சாணக்கியர் நம்புகிறார். உங்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும், தவறுகளையும் புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இதை செய்யாவிட்டால், உங்கள் திருமண வாழ்க்கை விரைவில் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.
பேச்சை நிறுத்தக்கூடாது
உங்கள் திருமண வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், நீங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்தக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். கணவன்-மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் இதுக்காக ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்தக்கூடாது. இல்லையேல் சிறு சண்டையே பெரியதாக மாறும். சிறு தீப்பொறியே ஒரு பெரும் காட்டை எரிப்பதற்கு போதுமானது. உங்களின் சிறிய சண்டை அப்படித்தான் உங்கள் உறவை அழிக்கும்.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவன்-மனைவி இருவரும் சிறிய, பெரிய பணிகளில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். பெரும்பாலான வீட்டில் ஆண்கள் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே விட்டு விடுகின்றனர். இது முதலில் நன்றாகத் தோன்றினாலும் பின்னர் அது மோதலுக்கு வழிவகுக்கும்.
திருமண வாழ்வில் கணவன் மனைவி பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். வாழ்க்கை சரியாக இருக்க, தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும்.
தேவையற்ற செலவு
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ பணம் மிகவும் அவசியம். பணத்தைப் பயன்படுத்துவதில் தம்பதிகளிடையே தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே கணவன்-மனைவி இடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளில் ஒருவர் மட்டுமே செலவுகளை கையாளத் தொடங்கினால், திருமண வாழ்க்கையில் விஷயங்கள் மோசமாகிவிடும்.
அவமரியாதை
தங்கள் துணையை அவமதிப்பதை சாதரண விஷயமென்று பலர் நினைக்கிறார்கள். சாணக்கியக் கொள்கையின்படி அனைவரும் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். திருமண உறவில் ஒரு ஆணோ பெண்ணோ அவமரியாதையாக நடந்து கொண்டால், அது விரைவில் அவர்களின் திருமணத்தின் முறிவிற்கு வழிவகுக்கும்.
கோபம்
கோபம் என்பது கணவன்-மனைவி உறவை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் ஒரு மோசமான உணர்வு. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். சாணக்கிய நீதியின்படி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கோபம் வரும்போது, எப்போதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருந்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












