Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் எவ்வளவு பெரிய பணக்காரரையும் ஏழையாக்கி விடுமாம்... ஜாக்கிரதை!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர் என்று பன்முக திறமைகளைக் கொண்டவர் மற்றும் அவரது பெயர் வரலாற்றில் வாழ்ந்த மேதைகளி பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. சாணக்கியர் தனது கொள்கைகளின் மூலம் சந்திரகுப்த மௌரியரை இந்தியாவின் பேரரசராக ஆக்கினார்.
மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும், துன்பங்களை நீக்கவும் அவர் சில கொள்கைகளை வகுத்தார். இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் வெற்றியின் உச்சத்தை அடையலாம்.

அத்தகைய கொள்கையில் ஒருவர் பணக்காரர் ஆக விரும்பினால், அவர் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இவற்றைக் கவனிக்காவிட்டால், பணக்காரன் கூட ஏழையாகிவிடுவார் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
சந்தனத்தை இப்படி தடவக்கூடாது
ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியது போல், வழிபாட்டின் போது கடவுளுக்கு சந்தனம் பூசுவதற்கு அரைக்கும் கல்லில் சந்தனத்தை அரைக்கக்கூடாது. கடவுளுக்கு சந்தனத்தை அரைத்து எப்பொழுதும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும், அதே சந்தனத்தை நம் உடலில் பூசக்கூடாது. ஒரு கல்லில் சந்தனம் பூசப்பட்டால், அவனுடைய செல்வமும் அழிந்துவிடும் என்று இந்திரன் கூறினார். எனவே, தினமும் கடவுளுக்கு சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும்.
சக்தி வாய்ந்தவர்களுடன் பகை
தெரியாமல் கூட உங்களை விட சக்தி வாய்ந்தவர்களுடன் பகை கொள்ளாதீர்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இப்படிச் செய்வதால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும், அது ஆயுட்காலத்தையும் குறைக்கிறது.
மேலும், லட்சுமி தேவி அப்படிப்பட்டவர்களுடன் இருக்கவே மாட்டார். ஒரு புத்திசாலி ஒரு சக்திவாய்ந்த மனிதனுடன் ஒருபோதும் பகைமை கொள்ள மாட்டான், மாறாக அவனை நண்பனாக்குவதன் மூலம் அந்த மனிதனை தோற்கடிக்கலாம். இதைச் செய்யக்கூடியவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரது செல்வமும், ஆயுளும் பெருகும்.
பணத்தை மறைக்கக்கூடாது
ஒரு பணக்காரர் எப்போதும் தீவிரமாக இருக்க வேண்டும் மேலும் அதிக பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மறக்கக்கூடாது. பணத்தின் வேலை எப்போதும் மக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டும், அது அவர்களின் செல்வத்தையும், கௌரவத்தையும் அதிகரிக்கும்.
பணத்தை செலவழிக்காமல் கஞ்சத்தனமாக பதுக்கி வைத்திருப்பவர்களின் பணம் அவர்களிடம் நீண்ட காலம் தங்காது, படிப்படியாக அது கரைந்துவிடும். செல்வம் பெருக பணம் நல்ல செயல்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
அதர்ம வழியில் செல்லக்கூடாது
தர்மத்தின் வழியைக் கைவிட்டு அதர்மத்தில் ஈடுபடுபவரிடம் லக்ஷ்மி நீண்ட காலம் தங்குவதில்லை என்று சாணக்கியர் கூறுகிறார். தர்மத்தின் வழியைப் பின்பற்றுபவர் அதிக பணம் பெறத் தொடங்கினால், அந்த நபரிடமிருந்து லட்சுமி வெளியேறும் நேரம் விரைவில் வரும், அவருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே ஒருவர் அதர்ம வழியில் சென்றால் அவர்களின் செல்வம் விரைவில் அழிவது உறுதி.
சாணக்கியரின் கூற்றுப்படி, மேலே கூறப்பட்ட குணங்களை ஒருவர் பெற்றிருந்தால், அவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், அவர் விரைவில் ஏழையாகிவிடுவார். வாழ்வில் செல்வமும், பணமும் விரும்புபவர்கள் மேற்கண்ட நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
