Latest Updates
-
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை பண்ணுனா உங்க முதுமைப்பருவம் ரொம்ப சந்தோஷமா இருக்குமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவஞானி. இந்திய வரலாற்றின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவராக சாணக்கியர் கருதப்படுகிறார். ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கையைச் சரியான முறையில் வாழ நீதி சாஸ்திரம் என்ற நூலை எழுதினார். சாணக்கிய நீதி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ மனிதர்களால் பின்பற்றக்கூடிய பல விதிகளைக் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் தனது பணிக்கும் பொறுப்புக்கும் இடையில் சமநிலையை பேணும்போது அவரது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. ஆச்சார்ய சாணக்கியர் கூறுகையில், முதுமை என்பது ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் வாழ விரும்பும் வாழ்க்கையின் கட்டமாகும்.

இந்த கட்டத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க ஒரு நபர் முன்னதாகவே செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இவற்றைச் செய்வதன் மூலம் முதுமையிலும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும்
உங்களிடம் பணம் இருக்கும் வரை, உங்கள் உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். ஆனால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டால், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உங்களை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு நபர் வயதடையும் போது இந்த துக்கம் அதிகரிக்கிறது. எனவே பணத்தை எப்போதும் நன்றாக முதலீடு செய்ய வேண்டும் என்கிறார் சாணக்கியர். நீங்கள் பணத்தைச் சேமித்தால், உங்கள் வயதான காலத்தில் நீங்கள் உதவிக்காக யாரையும் அணுக வேண்டியதில்லை.
ஒழுக்கம்
ஒழுக்கம் மற்றும் பயிற்சி மூலம் மட்டுமே நம்பிக்கை கட்டமைக்கப்படுகிறது. எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து, ஒழுக்கத்துடன் தங்கள் அன்றாட வழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் ஒருபோதும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய நபர் தனது எல்லா இலக்குகளையும் அடைகிறார்.
சாணக்யாகியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது வேலையை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் செய்யும் பழக்கத்தில் இருந்தால், அவர் வயதான காலத்தில் சிக்கல்களைச் சந்திக்க மாட்டார். சீரான உணவுப் பழக்கவழக்கங்கள், வழக்கமான நேரத்தில் தூங்குதல் மற்றும் எழுந்திருத்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றுடன் இணக்கமாக இருக்க வேண்டும். இது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
உதவி
தன்னலமின்றி மற்றவர்களுக்கு உதவுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை என்று சாணக்கியர் கூறுகிறார். தொண்டு மற்றும் கருணை ஆகியவை மிகப்பெரிய நற்பண்புகளாகும். இன்று உங்கள் உதவி உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. நல்ல காலத்தில் செய்யும் நற்செயல்களால் உங்கள் முதுமை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கழிகிறது. எனவே மற்றவர்களுக்கு உதவ எப்போதும் உங்கள் தயாராக இருங்கள்.
குடும்பத்துடன் இருக்க வேண்டும்
வயதான காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருந்தால், முதுமை சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் கடந்து செல்லும் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். முதுமையில் பேரக்குழந்தைகளுடன் இருப்பதை விட பெரிய மகிழ்ச்சி வேறில்லை.
உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெரும்பாலும் இளமையில் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்வது முதுமையை மோசமானதாக மாற்றிவிடும். இளமையில் முழு ஆற்றலையும் செலவழிப்பவர்கள் முதுமையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இளமையில் உங்கள் உடலைக் கவனித்து, போதை மற்றும் கெட்ட பழக்கங்களைத் தவிர்க்கவும். இது வயதான காலத்திலும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கிறார் சாணக்கியர்.
திருப்தியுணர்வு
ஆச்சார்ய சாணக்கியர் கூறுகையில், நீங்கள் வாழ்க்கையில் நிறைய பணம் மற்றும் பொருள் இன்பங்களைச் சேர்த்தாலும், நீங்கள் அதில் திருப்தி அடையவில்லை என்றால், அவை அனைத்தும் பயனற்றதாகும். எனவே உங்கள் வாழ்க்கையில் இருப்பதை வைத்து திருப்தியாக இருங்கள் மற்றும் கடவுள் உங்களுக்கு வழங்கியதற்கு நன்றியுடன் இருங்கள். இதன் மூலம் உங்கள் முதுமை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications












