Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த 3 பழக்கங்கள் உங்கள் செல்வத்தை அழித்து உங்களை வறுமையில் தள்ளுமாம்...!
Chanakya Niti: நாம் ஒப்புக்கொள்ளா விட்டாலும் தற்போதைய உலகில் பணம்தான் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஒருவரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலிருந்து ஆடம்பரத் தேவைகள் வரை அனைத்தையும் பூர்த்தி செய்ய பணம் அவசியமானதாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, நெருக்கடி காலங்களில் பணமே ஒருவரின் உற்ற நண்பர். பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி, அதை சரியாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் பணத்துக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது.
சாணக்கிய நீதியில் பணம் தொடர்பான பல முக்கிய விஷயங்களை ஆச்சார்ய சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையை வசதியாகவும், எளிமையாகவும் மாற்ற பணம் அவசியம் என்று சாணக்கியர் கூறுகிறார், ஆனால் பணத்தை மிக விரைவாக அழிக்கும் சில நடவடிக்கைகள் உள்ளன. சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பணத்தை ஒருவர் சில வழிகளில் சம்பாதிக்கக் கூடாது, சில வழிகளில் செலவு செய்யக்கூடாது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தவறான வழியில் சம்பாதிக்கும் பணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, பிறரைத் துன்புறுத்துவதன் மூலமும், புண்படுத்துவதன் மூலமும், எதிரியுடன் உறவாடுவதன் மூலமும் சம்பாதித்த பணம் நீண்ட காலம் நிலைக்காது. அப்படிப் பணம் கையில் இல்லாமல் இருப்பதே நல்லது. ஒரு நபர் ஒருபோதும் அத்தகைய செல்வத்திற்கு ஆசைப்படக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
பிறருக்குத் தீங்கிழைத்து, கடவுளுக்கு எதிரான செயல்களைச் செய்து அல்லது எதிரியுடன் சேர்ந்து சேகரித்த பணம் விரைவில் கையை விட்டு சென்றுவிடும். ஏனென்றால், அத்தகைய பணம் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பயனுள்ளதாக இருக்காது. மனிதன் எப்பொழுதும் கடின உழைப்பாலும், நற்செயல்களாலும் மட்டுமே செல்வத்தை குவிக்க வேண்டும்.
ஏமாற்றி சம்பாதித்த பணம்
தவறாக சம்பாதித்த பணம் உங்களுக்கு சில காலம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. ஆனால் நீங்கள் அதைவைத்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய பணம் எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். திருடி அல்லது ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் விரைவில் ஏழையாகி விடுவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
வரவுக்கு மீறிய செலவு
ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய வருமானத்தை மீறி செலவு செய்யக்கூடாது. வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினையில் தவிக்க வேண்டியிருக்கும். எனவே பணம் சம்பாதிப்பதுடன், பணத்தைச் சேமிப்பதும் மிகவும் அவசியம்.
ஏமாற்றி சம்பாதித்த பணம் அவமானத்தை ஏற்படுத்தும்
சாணக்கிய நீதி படி, ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் சமூகத்தில் மரியாதையை அடைய மாட்டார். அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் எங்கும் யாரும் மதிக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் மக்கள் இடம் கொடுப்பதில்லை. மோசடி மூலம் பெறப்பட்ட செல்வம் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு கூட வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
