சாணக்கிய நீதி படி இந்த பிரச்சினை இருக்கும் ஆண்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாதாம்...

"மற்றவர்களின் நடத்தை நமது மனஅமைதியை நாம் ஒருபோதும் அழிக்க அனுமதிக்கக்கூடாது" என்று கிரேக்க பழமொழி கூறுகிறது, ஆனால் சாணக்கியர் "ஒரு நபர் தனது மனதைத் தானே அழித்துக் கொள்கிறார்" என்று கூறுகிறார்.

இந்திய வரலாற்றில் இதுவரை அறியப்பட்ட மிகவும் மரியாதைக்குரிய மற்றும் சிறந்த ஞானிகளில் ஒருவர் சாணக்கியர். 'இந்தியாவின் முன்னோடி பொருளாதார நிபுணர்' என்று அழைக்கப்பட்ட சாணக்கியர் அவரது தந்திரத்தாலும், ஞானத்தாலும் இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றார்.

Chanakya Niti: Things That Destroy a Mans Peace in Life in Tamil

தைரியமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான வழிகளை சாணக்கியர் தனது கைப்பட எழுதியுள்ளார். இந்த அரிய புத்தகம் சாணக்கிய நீதி என்று அழைக்கப்படுகிறது. சாணக்கிய நீதியில் ஒரு மனிதனின் மன அமைதியை இழக்கச் செய்யும் சில விஷயங்களைப் பற்றி சாணக்கியர் கூறியுள்ளார்.

- ஒரு மனிதன் இல்லாதவற்றில் கவனம் செலுத்தி, தன்னிடம் உள்ளவற்றில் கவனத்தை இழக்கும்போது அவர் வாழ்க்கையில் அமைதியை இழக்க நேரிடும். அவரால் அவரது தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அவர் இன்னும் அடைய வேண்டிய விஷயங்களை இழக்கும் சூழ்நிலையைக எதிர்கொள்வதைப் பற்றி அவர் கவலைப்படுகிறார், இது அவரது நல்லறிவை இழக்கச் செய்கிறது.

- ஒருவர் தன்னை விட குறைவாக தன்னம்பிக்கை கொண்ட ஒருவருக்குக் கீழே வேலை செய்வதைப் பார்க்கும்போது அவர்கள் மனஅமைதியை இழப்பார்கள். மாறாக அவருடைய ஜாதி, மதம் மற்றும் ஞானம் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.

- ஒரு மனிதன் ஆரோக்கியமற்ற உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு, தனது சொந்த ஆரோக்கியத்தில் குறைந்தபட்ச அக்கறை செலுத்தும்போது நிம்மதியை இழக்கிறார்கள். இந்த நிலையான நடத்தை எதிர்மறை எண்ணங்கள், நல்வாழ்வு பற்றிய பயம் மற்றும் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

- எப்பொழுதும் முகத்தைச் சுளித்துக்கொண்டும், வெறித்தனமான கோபத்துடனும் இருக்கும் ஒரு மனைவியுடன் வாழும் ஆண் எப்போதும் முரண்பட்ட உறவில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், இது அவருடைய மன அமைதியை இழக்கிறது.

- தனக்கு கீழ்ப்படிய மறுக்கும் மகனைக் கொண்டமனிதர், அவருடைய போதனைகளை வெளியுலகில் அங்கீகரிக்கவோ அல்லது மதிக்கவோ தவறிவிடும் என்று பயப்படுகிறார்கள், அவருடைய மகன் அவருக்கும், அவரின் மனைவிக்கும் வெளியுலகில் அவமானத்தை ஏற்படுத்துவான்.

- தன் மகள் விதவையாவதைக் காணும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழமாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

Desktop Bottom Promotion