Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
சாணக்கிய நீதி படி எல்லோரையும் உங்க கண்ட்ரோலில் வைக்க நீங்க இந்த விஷயத்தை அவசியம் கத்துக்கணுமாம்!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெறுவதற்கான பல வழிகளைக் கூறியுள்ளார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் நம்முடைய கருத்துக்கு மற்றவர்களை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும், அவர்கள் நம் பேச்சைக் கேட்க வைக்க என்ன செய்ய வேண்டும் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும், ஆனால் சிலரிடம் இந்த குணங்கள் இயற்கையாகவே இருக்கும். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் இதைப் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளார், இவர்களின் உதவியுடன் உங்களின் வார்த்தைகளுக்கு மற்றவர்களைக் கீழ்ப்படியச் செய்யலாம் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தலாம்.

இதற்கு, சரியான நபரை அடையாளம் காண வேண்டியது அவசியம். சாணக்கியரின் நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த குணத்தை நீங்கள் பெறலாம்.
எந்தவொரு விஷயத்தையும் பொது மக்களிடம் ஒப்படைக்கும் முன் அல்லது அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு முன், அதைப் பற்றிய முழுமையான தகவல் அல்லது அறிவு இருப்பது முக்கியம். குறிப்பாக, சில சமயங்களில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மனம் மாறாத பலர் நம்மைச் சுற்றி இருப்பார்கள். அவர்களின் மனநிலையை மாற்ற சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
பேராசை கொண்டவர்கள்
சாணக்கிய நீதி, பேராசைக்காரனைப் பணம் கொடுத்தால்தான் சமாதானப்படுத்த முடியும் என்கிறது. அதாவது பணமில்லாமல் பேராசை கொண்ட ஒருவரை நீங்கள் எந்த வகையிலும் கவர முடியாது. கொஞ்சம் பணம் செலவழிக்காமல் பேராசைக் கொண்டவர்களை நீங்கள் ஒருபோதும் உங்களின் கருத்துக்கு சம்மதிக்க வைக்க முடியாது.
திமிர் பிடித்தவர்கள்
ஒரு திமிர்பிடித்த நபரை சம்மதிக்க வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ நீங்கள் அவர்களுக்கு தலைவணங்க வேண்டும். கைகூப்பி கேட்பதன் மூலமோ அல்லது தலை குனிந்து மன்றாடுவதன் மூலமோ அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். திமிர் பிடித்தவர்கள் தங்கள் வழியை சரி என்று நினைக்கிறார்கள். எனவே நீங்கள் அவர்களின் வழியில்தான் செல்ல வேண்டும்.
முட்டாள்கள்
ஒரு முட்டாளை நம்ப வைக்க வேண்டுமானால், அவருடைய மனநிலையை ஆராய்ந்த பிறகு, அதைக்கேற்றார் போல நீங்கள் செயல்பட வேண்டும். இது அவரை மகிழ்ச்சியடையச் செய்து உங்களை நம்ப வைக்கும். அப்போதுதான் நீங்கள் நினைத்ததை செய்ய அவரை வற்புறுத்த முடியும்.
புத்திசாலிகள்
ஒரு புத்திசாலியான நபர் எந்த விஷயத்திலும் உண்மையைச் சொல்லி, லாஜிக்காக பேசி எதையும் நம்ப வைக்க முடியும், இப்படிப்பட்டவர்களை கட்டுப்படுத்த, நீங்களும் புத்திசாலியாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.
நீங்கள் ஒருவரை வற்புறுத்துவதற்கு முன், அவர்களின் ஆளுமையை சரியாகப் புரிந்துகொண்டு, அவர்களின் இயல்புக்கு ஏற்ப உங்கள் நடத்தையை மாற்றுவது உங்களுக்கு நல்லது என்று சாணக்கியர் பரிந்துரைக்கிறார்.



Click it and Unblock the Notifications












