Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
சாணக்கிய நீதி படி எல்லோரையும் உங்க கண்ட்ரோலில் வைக்க நீங்க இந்த விஷயத்தை அவசியம் கத்துக்கணுமாம்!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெறுவதற்கான பல வழிகளைக் கூறியுள்ளார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் நம்முடைய கருத்துக்கு மற்றவர்களை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும், அவர்கள் நம் பேச்சைக் கேட்க வைக்க என்ன செய்ய வேண்டும் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும், ஆனால் சிலரிடம் இந்த குணங்கள் இயற்கையாகவே இருக்கும். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் இதைப் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளார், இவர்களின் உதவியுடன் உங்களின் வார்த்தைகளுக்கு மற்றவர்களைக் கீழ்ப்படியச் செய்யலாம் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தலாம்.

இதற்கு, சரியான நபரை அடையாளம் காண வேண்டியது அவசியம். சாணக்கியரின் நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த குணத்தை நீங்கள் பெறலாம்.
எந்தவொரு விஷயத்தையும் பொது மக்களிடம் ஒப்படைக்கும் முன் அல்லது அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு முன், அதைப் பற்றிய முழுமையான தகவல் அல்லது அறிவு இருப்பது முக்கியம். குறிப்பாக, சில சமயங்களில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மனம் மாறாத பலர் நம்மைச் சுற்றி இருப்பார்கள். அவர்களின் மனநிலையை மாற்ற சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
பேராசை கொண்டவர்கள்
சாணக்கிய நீதி, பேராசைக்காரனைப் பணம் கொடுத்தால்தான் சமாதானப்படுத்த முடியும் என்கிறது. அதாவது பணமில்லாமல் பேராசை கொண்ட ஒருவரை நீங்கள் எந்த வகையிலும் கவர முடியாது. கொஞ்சம் பணம் செலவழிக்காமல் பேராசைக் கொண்டவர்களை நீங்கள் ஒருபோதும் உங்களின் கருத்துக்கு சம்மதிக்க வைக்க முடியாது.
திமிர் பிடித்தவர்கள்
ஒரு திமிர்பிடித்த நபரை சம்மதிக்க வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ நீங்கள் அவர்களுக்கு தலைவணங்க வேண்டும். கைகூப்பி கேட்பதன் மூலமோ அல்லது தலை குனிந்து மன்றாடுவதன் மூலமோ அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். திமிர் பிடித்தவர்கள் தங்கள் வழியை சரி என்று நினைக்கிறார்கள். எனவே நீங்கள் அவர்களின் வழியில்தான் செல்ல வேண்டும்.
முட்டாள்கள்
ஒரு முட்டாளை நம்ப வைக்க வேண்டுமானால், அவருடைய மனநிலையை ஆராய்ந்த பிறகு, அதைக்கேற்றார் போல நீங்கள் செயல்பட வேண்டும். இது அவரை மகிழ்ச்சியடையச் செய்து உங்களை நம்ப வைக்கும். அப்போதுதான் நீங்கள் நினைத்ததை செய்ய அவரை வற்புறுத்த முடியும்.
புத்திசாலிகள்
ஒரு புத்திசாலியான நபர் எந்த விஷயத்திலும் உண்மையைச் சொல்லி, லாஜிக்காக பேசி எதையும் நம்ப வைக்க முடியும், இப்படிப்பட்டவர்களை கட்டுப்படுத்த, நீங்களும் புத்திசாலியாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.
நீங்கள் ஒருவரை வற்புறுத்துவதற்கு முன், அவர்களின் ஆளுமையை சரியாகப் புரிந்துகொண்டு, அவர்களின் இயல்புக்கு ஏற்ப உங்கள் நடத்தையை மாற்றுவது உங்களுக்கு நல்லது என்று சாணக்கியர் பரிந்துரைக்கிறார்.



Click it and Unblock the Notifications
