Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று இருந்தாலும் அவங்க வாழ்க்கையில் தோற்று போயிருவாங்களாம்...!
Chanakya Niti: சாணக்கியரைப் பற்றியோ, அவருடைய கொள்கைகளைப் பற்றியோ யாரும் இந்தியாவில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் தனது சாணக்கிய நீதியில் மனிதர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார். ஒரு நபர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையும் அதே நேரத்தில், வெற்றிகரமான வேலை கூட மோசமான செயல்களால் தோல்வியடைகிறது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஒருவரிடம் சில தவறாம குணங்கள் இருந்தால், அவர் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவரால் வெற்றி பெற முடியாது. ஆச்சார்யா சாணக்யா, இதுபோன்ற சில விஷயங்களிலிருந்து எப்போதும் விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒருவரின் வாழ்க்கை முறை மற்றும் அவரது குணங்கள் மற்றும் குறைபாடுகள் அவரது வாழ்க்கையை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஒவ்வொருவருக்கும் சில குறைகள் இருக்கும். ஆனால் இந்தக் குறைபாடுகளைசரியான நேரத்தில் உங்களுக்குள் இருந்து நீக்காவிட்டால், அதன் விளைவு வாழ்நாள் முழுவதும் உங்களை பாதிக்கும் என்கிறார் சாணக்கியர். சாணக்கியா நீதியின் படி, உங்கள் தோல்விக்கு வலுவாகும் உங்களிடம் இருக்கும் மோசமான குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உறுதியில்லாத மனம்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அமைதியான மனது மிகவும் அவசியம் என்கிறார் சாணக்கியர். மன அமைதி இல்லாத எந்த மனிதனும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நிலையற்ற மனதுடன் இருப்பவர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது அல்லது எதையும் சரியாக செய்ய முடியாது.
இப்படிப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் பலவிதமான பிரச்சனைகளால் சூழப்பட்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் இந்தக் குறைபாட்டினால் அவர்களும் வாழ்க்கையில் பல் தோல்விகளைச் சந்திப்பார்கள்.
மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்த்து வருத்தமடைவது
சாணக்கிய நீதியின் படி, சிலருக்கு மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்த்தால் வருத்தமாக இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருப்பார்கள், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்பட்டே அழிவார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியையோ அல்லது மற்றவர்களின் ஆதரவையோ பெற மாட்டார்கள்.
கட்டுப்பாடில்லாத மனம்
சாணக்கிய நீதியின் படி ஒருவர் தனது முழு உடலையும் மனதின் மூலமே கட்டுப்படுத்துகிறார். மனதின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மனிதனின் மனமும் உடலும் எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியாது. இப்படி நிலையற்ற மனம் உள்ளவர்கள் எந்த வேலையிலும் கவனம் செலுத்தி வெற்றிகளை பெற முடியாது. ஒருவரின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணம்.
ஒழுக்கமின்மை
ஒழுக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஒருவேளை அதிர்ஷ்டத்தால் அப்படிப்பட்டவர்கள் வெற்றி பெற்றாலும் அது நீண்ட காலம் நீடிக்காது. உங்கள் பணிகள் வெற்றிபெற அவற்றை ஒழுக்கத்துடன் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். இந்த குணம் இல்லாமல் எந்த மனிதனும் வெற்றியை அடைய முடியாது.
கவனக்குறைவு
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக இருக்க விரும்பினால், எந்த ஒரு வேலையையும் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்யுங்கள். வேலையில் கவனக்குறைவாக இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள். அவர்களை நம்பி யாரும் வேலையும் தரமாட்டார்கள்.
இலட்சியம் இல்லாமை
இக்கட்டான நேரங்களிலும் தங்கள் இலக்கை விட்டுக் கொடுக்காதவர்கள், பொறுமையுடனும் நேர்மையுடனும் தங்கள் வேலையைச் செய்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்கிறார் சாணக்கியர். வெற்றி என்பது ரோஜாவைப் போன்றது, அதன் பாதை முட்கள் நிறைந்தது. ஆனால் சேருமிடம் மிகவும் அழகாக இருக்கும். நோக்கம் இல்லாத எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications












