Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கிறவங்ககிட்ட தோல்வி எப்பவும் கிட்ட வராதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர். இவர் மௌரிய பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் வழிகாட்டியாக இருந்தார். அவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சாணக்கியரின் புத்தகமான அர்த்தசாஸ்திரம் அரசியல், இராஜதந்திரம், மனித வாழ்க்கை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. சாணக்கிய நீதியில் எழுதப்பட்ட விஷயங்களைப் பழமையானவை என்று சொன்னாலும், இன்றும் சாணக்கிய நிதியில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சாணக்கிய நீதியில் நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இன்று ஒவ்வொரு நபரும் தனது இலக்கில் வெற்றிபெற வேண்டிய அவசியத்தில் உள்ளனர். சாணக்கியரின் எண்ணங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் பல்வேறு வகையான பாதைகள் மூலம் இலக்கை அடைய முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் ஆச்சார்யா சாணக்கியர், மனிதர்களை தோல்வியிலிருந்து பாதுகாக்கும் மனிதர்களின் சில குணங்களை விவரித்துள்ளார்.
அறிவாற்றல்
ஒரு நபர் தனது சுற்றுச்சூழலைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், மேலும் வெற்றிக்கு வேலை, சூழ்நிலை போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஞானம் இருக்க வேண்டும். தாங்கள் செய்யும் வேலையின் முடிவுகளை எதிர்பார்க்க முடியாதவர்கள் அல்லது அறியாதவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்கடிக்கப்படுகிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சமூகத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் அம்சத்தையும் அறிந்திருக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, அறிவே ஒரு மனிதனின் வெற்றிக்கான முதல் மற்றும் அடிப்படை குணமாகும்.
திறந்த மனம்
மனதின் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது, உங்களைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த குணம் கொண்ட ஒரு நபர் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்.
ஏதேனும் திடீர் நிகழ்வு அல்லது சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டால் உங்கள் திரட்டப்பட்ட செல்வம் மட்டுமே உங்களை ஆதரிக்கும். எனவே எப்பொழுதும் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் சிறிது பணத்தை சேமிக்கவும். சாணக்கியரின் கூற்றுப்படி, செல்வத்தைக் குவிப்பவர்களும் தோல்வியைத் தவிர்க்கலாம்.
பண சேமிப்பு
ஏதேனும் திடீர் ஆபத்துகள் ஏற்பட்டால் நீங்கள் சேமித்த செல்வம் மட்டுமே உங்களை காப்பாற்றும். எனவே எப்பொழுதும் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் வருமானத்தில் இருந்து சிறிது பணத்தை சேமிக்கவும். சாணக்கியரின் கூற்றுப்படி, செல்வத்தைக் குவிப்பவர்கள் எப்போதும் எளிதாக தோல்வியைத் தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை
எந்தவொரு செயலிலும் வெற்றிபெற, மிக முக்கியமான விஷயம் உங்களை நம்புவது. அந்த வேலையைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே உங்கள் வேலையில் வெற்றி பெற முடியும். சாணக்கியரின் கூற்றுப்படி, வெற்றிபெற உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் தளர விடாதீர்கள்.
பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு வேலையிலும் விரும்பிய முடிவைப் பெற ஒரு நபரிடம் பொறுமை இருப்பது அவசியம். பொறுமையுடன் இலக்கை நோக்கி தொடர்ந்து பாடுபடுபவர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும். எனவே, தோல்வியால் உங்கள் இலக்கிலிருந்து திசைமாற வேண்டாம், மாறாக உங்களிடம் இருக்கும் குறைபாடுகள் என்னவென்று கண்டறிந்து அதை சரிசெய்ய முயலுங்கள்.



Click it and Unblock the Notifications












