Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சாணக்கிய நீதி படி உடலில் இந்த அடையாளம் உள்ள பெண்கள் மோசமான குணங்கள் உள்ளவர்களாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் மற்றும் சாணக்கிய நீதிக்கு இந்திய கலாச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது, அதனால்தான் இன்றும் சாணக்கிய நீதி மிகவும் பிரபலமாக இருக்கிறது. சாணக்கியர் ஒரு நல்ல ஞானி மற்றும் வழிகாட்டி என்பதை நாம் நன்கு அறிவோம். சாணக்கியர் உலகில் நடக்கும் மற்றும் நடக்கக்கூடிய பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார் மற்றும் அவற்றை தனது நூல்களில் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்று வரும்போது, பெரும்பாலான மக்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் அழகாக இருந்தாலும் சில பெண்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக சிதைக்கக் கூடியவர்காளக இருக்கிறார்கள். சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் வாழ்க்கை மீதான கண்ணோட்டமே மாறக்கூடும். திருமண வாழ்க்கைப் பற்றி சாணக்கிய நீதி கூறும் விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் குணம்
ஒரு பெண் ஒரு குடும்பத்தை சொர்க்கமாகவோ அல்லது நரகமாகவோ மாற்றும் ஆற்றல் கொண்டவர் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் பெண்களின் குணாதிசயத்தின் அடிப்படையில்தான் குடும்பத்தின் நிம்மதி உள்ளது என்று கூறுகிறார். அதன்படி சில குணங்கள் கொண்ட பெண்கள் குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் கெடுக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கழுத்தின் அளவு
கழுத்தின் அளவிற்கும் பெண்களின் குணாதிசயங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கழுத்து நான்கு விரல்களை விட பெரியதாக இருக்கும் பெண்கள் குடும்பத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அழித்துவிடுவார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு அறிவியல் விளக்கம் இல்லை என்றாலும், சாணக்கியர் இவற்றை தனது அனுபவத்திலிருந்து எழுதியுளளார்.
உள்ளங்கை அளவு
உள்ளங்கையின் அளவிற்கும் பெண்களின் இயல்புக்கும் தொடர்பு இருப்பதாக சாணக்கிய நீதி கூறுகிறது. தட்டையான உள்ளங்கையை உடைய பெண்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என்பது ஐதீகம். சாணக்கிய நீதி படி, அத்தகைய பெண்கள் உள்ள வீட்டின் செல்வமும் அதிகரிக்கும் என்று கூறுகிறது. அந்த பெண்கள் உள்ள குடும்பம் எந்த வித நெருக்கடியையும் அவர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை.
கண்ணின் நிறம்
பெண்களின் உடலில் கண் நிறமும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மஞ்சள் நிற கண்கள் கொண்ட பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கிறது. இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும் என்கிறார் சாணக்கியர்.
முரட்டுத்தனம்
பெண்களுக்கு முரட்டு குணம் நல்லதல்ல, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த வகை பெண்கள் வீட்டின் சாபக்கேடு போன்றவர்கள், அவர்கள் ஒருபோதும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். பெண்களுக்கு மோசமான மற்றும் முரட்டுத்தனமான சுபாவம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் அவர்களால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
