Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம்..எல்லாமே வெற்றிதான் இவங்களுக்கு
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு புகழ்பெற்ற அறிஞர், அவர் சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு திட்டமிடுவதில் தலைசிறந்தவர் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர். சாணக்கியருடைய அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாணக்கியரின் கொள்கையைப் பின்பற்றி உலகில் பலர் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். சாணக்கிய நீதியில் நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெறுவதற்கான வழிகளை தெரிந்து கொள்ளலாம்.

சாணக்கியருக்கு அரசியல் மற்றும் இராஜதந்திரம் பற்றிய நல்ல புரிதல் இருந்தது. இது தவிர வேறு பல பாடங்களிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சாணக்கியர் பொருளாதாரத்தில் நிபுணராக இருந்தார். எனவே அவர் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார். சாணக்கியரின் அறிவுரைகளை ஒருவர் தன் வாழ்வில் இணைத்துக் கொண்டால், அவர் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும்.
சாணக்கியர் ஒருவரிடம் இருக்க வேண்டிய சில குணங்களைப் பற்றி பேசியுள்ளார். இந்த குணங்களைக் கொண்ட ஒரு நபர் எப்போதும் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஒரு புத்திசாலி சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுகிறார். அப்படிப்பட்டவரின் வார்த்தைகளை சமுதாயம் கேட்டு பின்பற்றுகிறது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒருவரிடம் இருக்கும் சில குணங்கள் அவர்களை அறிவாளியாக மாற்றுகிறது. அந்த குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெருக்கடியான சூழ்நிலையில் அமைதி காப்பது
வாழ்க்கையின் இக்கட்டான நேரங்களிலும் தன் உணர்வுளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர் புத்திசாலி என்று அழைக்கப்படுவதாக சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், நெருக்கடியான நேரங்களில் அவசர முடிவுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். எனவே ஒரு நெருக்கடி ஏற்படும் போது, உங்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் சிக்கலகளைத் தவிர்க்கலாம். நெருக்கடிகள் ஏற்படும் போது தயங்காமல், உங்கள் சொந்த பலம் மற்றும் திறன்களின் உண்மையான உணர்வுடன் உங்கள் நெருக்கடிகளை சமாளிக்கவும்.
தவறு செய்யாமல் இருப்பவர்கள்
சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் ஞானி என்று அழைக்கப்படுவார். எனவே ஒருவர் எப்போதும் தவறு மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சர்ச்சைகளில் சிக்காமல் புத்தியை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறத் தெரிந்தவரை அறிவாளி என்று அழைக்கலாம் என்கிறார் சாணக்கியர்.
எதிர்கால திட்டங்களை பாதுகாப்பவர்கள்
சாணக்கியர், தனது எதிர்காலத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர் ஒரு புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் வேலை முடிவதற்குள் தனது திட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களின் வேலையை கெடுக்க வாய்ப்புள்ளது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
இலக்கில் கவனம் செலுத்துபவர்கள்
எப்பொழுதும் தனது இலக்கை அடைவதற்காக உழைத்து, எந்தத் தடைகளையும் அச்சமின்றிச் சமாளிக்கும் திறன் கொண்டவர்தான் அறிவாளி என்கிறார் சாணக்கியர். நேரத்தையோ, சூழ்நிலையையோ பற்றி கவலைப்படாத ஒருவர் தனது இலக்கை அடைய அதிக நேரம் எடுப்பதில்லை.
ஆன்மீகப்பாதை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒரு நபர் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைப் பெறுவார். இந்த குணத்தின் காரணமாக, ஒரு நபர் தன்னை சிற்றின்பங்கள் மற்றும் ஆடம்பரங்களிலிருந்து விலகி, வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தின் மீது கவனம் செலுத்த முடிகிறது. இப்படிப்பட்டவர்களை புத்திசாலி என்று அழைக்கலாம் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
