Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான்... உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணரும், இராஜதந்திரியுமான சாணக்கியர் மனித நடத்தை, உறவுகள் மற்றும் ஆட்சிமுறை குறித்த அவரின் ஞானத்திற்காகப் புகழ்பெற்றவர். சாணக்கிய நீதி என்ற அவரது புகழ் பெற்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரது அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள், வெற்றிகரமான உறவுகளைப் பேணுவது உட்பட, பல பயனுள்ள வாழ்க்கை பாடங்களை உள்ளடக்கியுள்ளன.
சாணக்கிய நீதியில் ஒரு நல்ல மனைவிக்கு இருக்க வேண்டிய குணங்கள் குறித்த சாணக்கியரின் அறிவுரை, திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்திற்கான ஒரு தனித்துவமான வழிகாட்டியாக உள்ளது. இந்த பதிவில் , சாணக்கியரின் அறிவுரையின் படி, ஒரு அன்பான மற்றும் உறுதியான திருமணத்தை உருவாக்க ஒரு மனைவியிடம் இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல மனைவி கொண்டிருக்க வேண்டிய மிகவும் முக்கியமான நற்பண்புகளில் பொறுமையும் ஒன்றாகும். பொதுவாக திருமண வாழ்க்கையில் சவால்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. இதுபோன்ற தருணங்களில், திருமண உறவை பாதுகாப்பதிலும், நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் ஒரு மனைவியின் பொறுமை முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, ஒரு நல்ல மனைவி அமைதியாகவும், நிதானமாகவும் இருந்து, சூழ்நிலைகளை நேர்த்தியுடன் கையாளுவார்.
திருமண வாழ்க்கையில் சவால்களும், பிரச்சினைகளும் தவிர்க்க முடியாதவை, ஆனால் அந்த சூழலில் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது அந்த உறவை வலுப்படுத்தவோ அல்லது சிதைக்கவோ கூடும். பொறுமைசாலியான மனைவி அமைதியாக இருந்து, தனது நற்குணத்தின் மூலம் மோதல்களைத் தீர்த்து, குடும்பத்தில் அமைதியை உறுதி செய்வார்.
அறிவாற்றல்
சாணக்கிய நீதி படி, ஒரு நல்ல மனைவிக்கு அறிவும், விவேகமும் இருக்க வேண்டும். அறிவு என்பது கல்வியை மட்டுமே பொறுத்தே நிர்ணயிக்கப்படுவதில்லை, மாறாக வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய புரிதலையும், சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் குறிக்கிறது. ஒரு மனைவியின் ஞானமே, குடும்பத்தை நிர்வகிப்பதற்கும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், தேவைப்படும்போது வழிகாட்டுதல் வழங்குவதற்கும் உதவுகிறது. மனைவியின் விவேகம், குடும்ப விஷயங்களைக் கையாள்வதற்கும், உறவுகளைப் பேணி வளர்ப்பதற்கும், துன்ப காலங்களில் தன் கணவனுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உதவும்.
விசுவாசம் மற்றும் நேர்மை
எந்தவொரு வெற்றிகரமான உறவிற்கும் விசுவாசமே அடித்தளமாக இருக்குமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார், இதற்கு திருமண உறவும் விதிவிலக்கல்ல. ஒரு நல்ல மனைவி தன் கணவனுக்கு உணர்ச்சிரீதியாகவும், உடல்ரீதியாகவும் விசுவாசமாக இருக்க வேண்டும். அவரின் விசுவாசமே உறவில் நம்பிக்கையை வளர்க்கிறது, அதுவே அவர்களின் திருமணத்தை பாதுகாக்கும்.
திருமணமான தம்பதிகளுக்குள் இருக்கும் நம்பிக்கையே அவர்களின் ஆழ்மன எண்ணங்கள், அச்சங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விசுவாசமுள்ள ஒரு மனைவி, எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை நம்பலாம் என்ற பாதுகாப்பைத் தன் கணவனுக்கு அளிக்கிறார். இந்த அசைக்க முடியாத விசுவாசம் ஒரு வலுவான மற்றும் நீடித்த உறவுக்கு அவசியமானதாகும்.
புரிதல் மற்றும் இரக்கம்
தன் கணவரின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் ஒரு மனைவி, இரக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் உறவை வலுப்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். புரிதலும் இரக்கமும் ஒவ்வொரு மனைவியும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான நல்ல குணங்களாகும். ஒரு மனைவியின் முக்கிய கடைமை, தன் கணவரின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்துகொண்டு, அவருடன் இணக்கமாக நடந்துகொள்வதுதான் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
கணவர் சுமையாக உணரும்போது அவருக்கு ஆதரவளித்து, துன்ப காலங்களில் ஆறுதல் அளிக்கும் அவரது உணர்ச்சிப்பூர்வமான ஆதாரமாக அவர்கள் இருக்க வேண்டும். புரிதலும், இரக்கமும் உள்ள ஒரு மனைவி தன் கணவருடன் ஒரு வலுவான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை உருவாக்க முடியும்.
சுதந்திர உணர்வு
சாணக்கிய நீதியின் படி ஒரு நல்ல மனைவி தன் கணவருக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில் அவர் தன்னுடைய சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது. ஒரு நல்ல மனைவி தன் சொந்தக் காலில் நிற்கும் வலிமையையும், தன் இலக்குகளைப் பின்தொடரும் திறனையும், குடும்பத்திற்கு பங்களிப்பை வழங்கும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தன் வாழ்க்கையை நிர்வகிக்கும் நம்பிக்கையையும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். குடும்பத்தின் நலனுக்குப் பங்களிக்கும் ஒரு சுதந்திரமான மனைவி, ஒரு சமநிலையான மற்றும் மரியாதைக்குரிய திருமண உறவை உருவாக்குவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
