Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்... உங்ககிட்ட எத்தனை இருக்கு?
சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த இராஜதந்திரி ஆவார். ஏறக்குறைய எல்லா விஷயங்களிலும் அவருக்கு சிறந்த ஞானமும், புரிதலும் இருந்தது. சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரின் தந்திரத்தால்தான் பேரரசனாக்கப்பட்டார்.
சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. பின்பற்றுவதற்கு கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் பின்பற்ற கற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

சாணக்கியரின் அனுபவம் மற்றும் ஞானத்தின் தொகுப்பே அவரின் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதியாகும். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பது பற்றிய முக்கியமான தகவல்களை சாணக்கிய நீதி வழங்குகிறது.
சாணக்கியரின் கூற்றுப்படி ஒருவரிடம் உள்ள 5 குணங்கள் அவரை அறிவாளியாக்குகின்றன. அந்த குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நெருக்கடியான சூழலில் அமைதியாக இருப்பது
கடினமான மற்றும் துன்பமான நேரங்களிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நபர் சிறந்த புத்திசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் நெருக்கடியான காலகட்டங்களில் எடுக்கும் அவசர முடிவுகள் பிற்காலத்தில் உங்களைக் காயப்படுத்தும். எனவே நெருக்கடியான காலக்கட்டங்களில் ஏற்படும் போது, உங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல், கோபத்தை வெளிக்காட்டாமல் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, சரியான முடிவெடுக்க வேண்டும்.
தவறு செய்யாக்கூடாது
சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் ஞானி என்று அழைக்கப்படுவார். எனவே ஒரு நபர் எப்போதும் தவறான செயல்கள் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
திட்டங்களை ரகசியமான வைத்திருப்பது
சாணக்கியர் தனது எதிர்கால திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பவர்களை சிறந்த புத்திசாலி என்று கூறுகிறார். ஏனென்றால், ஒரு வேலையை முடிப்பதற்குள் யாராவது அதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவித்தால், அந்த வேலை தடைபட வாய்ப்புள்ளது. சாணக்கியரன் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திட்டங்கள் வெற்றியை அடையும் வரை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
இலக்கை ஒருபோதும் தவற விடக்கூடாது
தனது இலக்கை அடைவதற்காக உழைத்து, எந்தத் தடைகளையும் அச்சமின்றி சமாளிக்கும் திறன் கொண்டவர்தான் உண்மையான அறிவாளி என்கிறார் சாணக்கியர். நேரம் அல்லது கடினமான சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கும் நபர்கள் வெற்றியை அடைய நீண்ட காலம் தேவைப்படாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
பக்தி
ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள் ஞானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பதால் அவர்கள் எப்போதும் ஞானமுள்ளவராக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே எப்போதும் ஆன்மீக வழியைப் பின்பற்ற வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications

