Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் பெரிய உயரத்தை அடைவார்களாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதியில் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் கூறப்பட்டுள்ளது. நீங்கள் சாணக்கிய நீதியைப் பின்பற்றினால், வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவரின் குணமும் நடத்தையும் அவருக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதை அளிக்கிறது. சமுதாயத்தில் மரியாதையைப் பெறுவார்.
மக்கள் அவரை ஒரு ஜென்டில்மேன் என்றும் அறிவார்கள். ஆனால், இவையனைத்தும் நமது நல்ல இதயத்தாலும் நேர்மையான வாழ்க்கை முறையாலும் மட்டுமே சாத்தியமாகும். சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ நமது நல்ல குணங்கள் உதவுகின்றன.

நேர்மை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவை மனிதர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளாகும். நாம் சரியான பாதையில் சென்றால் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நமது நடத்தையே நமது ஆளுமையை உருவாக்குகிறது. ஆச்சார்யா சாணக்கியர், ஒருவரிடம் இருக்கும் எந்தெந்த குணங்கள் அவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று கூறுகிறார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் மிக முக்கியமான குணம் பொறுமை. பல சமயங்களில் பொறுமை ஒரு வரமாகவும் இருக்கலாம். பொறுமையாக இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும் சரியாகச் சிந்தித்து முடிவெடுத்து அந்தச் சூழ்நிலையை எளிதில் சமாளிப்பார்.
விதியின் விளையாட்டால் கடல் கூட சில சமயங்களில் தன் எல்லையை மீறுகிறது, கரையை விழுங்கி பேரழிவை ஏற்படுத்துகிறது மற்றும் மக்களை துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், சகிப்புத் தன்மை உடையவர்கள், இப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலைகளிலும் அவர் பொறுமையை இழப்பதில்லை. இந்த குணம் வெற்றிக்கான பாதையை நோக்கி அவர்களை அழைத்துச்செல்லும்.
நேர்மை
இது அனைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும். நேர்மையே மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான வாழ்க்கைக்கான பாதையாகும். எனவே எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்களின் நேர்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
நேர்மையை சமரசம் செய்துகொள்ளும் போது வாழ்க்கையில் வழிதவற வாய்ப்பு அதிகமாகும். நேர்மையானவர்களை சமூகமும் மதிக்கிறது. அவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் வெற்றியை அடைகிறார்கள். எனவே வாழ்க்கையில் நேர்மை மிகவும் முக்கியமானது என்கிறார் ஆச்சார்யா சாணக்கியர்.
அலட்சியமின்மை
எந்த சூழ்நிலை வந்தாலும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டு எதையும் அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆச்சார்ய சாணக்கியர் ஒருவர் தனது தீவிரத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
ஒரு மோசமான சூழ்நிலை உங்களுக்கு முன்னால் வந்தால், உங்கள் கவனத்தை விட்டுவிடாதீர்கள் என்று ஆச்சார்யா கூறுகிறார். ஜென்டில்மேன்கள் அவர்களின் குணம், தீவிரம் மற்றும் நடத்தை மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.
பொறுப்பான நிர்வாகம்
தன் குடும்பப் பொறுப்பை தன்னலமின்றியும், திறமையுடனும் செய்பவர் ஜென்டில்மேன் என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெறுவார்கள் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர்.



Click it and Unblock the Notifications












