Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...!
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களை செய்ய வெட்கப்படுவார்கள் வாழ்க்கையில் எப்பவும் ஜெயிக்க மாட்டாங்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மனித வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பற்றி கூறியுள்ளார். மனித சமுதாயத்தின் நலனுக்காக சாணக்கியர் பல விஷயங்களை கூறியுள்ளார். இந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும். அவரது கொள்கைகள் இன்றும் மக்களிடையே பிரபலமாக உள்ளன.
சாணக்கிய நீதியில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க பல வழிமுறைகளையும் கொள்கைகளையும் வழங்கியுள்ளார். வாழ்வின் இன்ப துன்பங்களை விவரிக்கும் நீதி சாஸ்திரத்தின் வசனங்களில் பல ரகசியங்கள் மறைந்துள்ளன. இந்த கொள்கைகளை ஒருவர் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துத் தடைகளையும் கடந்து வெற்றி பெறலாம்.

சாணக்கிய நீதியில் சில படைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 3 விஷயங்களை செய்வதற்கு ஒருவர் வெட்கப்படவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த செயல்களுக்காக நீங்கள் வெட்கப்பட்டால், அது எதிர்காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிட வெட்கப்படக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் ஒருவர் சாப்பிடுவதற்கு ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. ஏனெனில் சாப்பிட வெட்கப்படுபவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே நீங்கள் சாப்பிடுவதற்கு எப்போதும் வெட்கப்படக்கூடாது. எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சாப்பிடுவதை மட்டும் ஒருவர் தவிர்க்கக் கூடாது.
சாணக்கியரின் கூற்றுப்படி, விருந்தாளியாக ஒருவரின் வீட்டிற்குச் சென்று சாப்பிட கூச்சமாக இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக பசி இருக்கும். எனவே எப்பொழுதும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும், இதுபோன்ற விஷயங்களில் வெட்கப்படக் கூடாது.
பண விஷயங்கள்
பணம் தொடர்பான விஷயங்களில் வெட்கப்படவே கூடாது என்கிறார் சாணக்கியர். நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பண விஷயத்தில் வெட்கப்பட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்ய வெட்கப்படுபவர் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியை அடைய மாட்டார்.
கடனாகக் கொடுத்த பணத்தைக் கூட, அவமானத்திற்குப் பயந்து சொந்தப் பணத்தைத் திரும்பக் கேட்க தயங்கும் சிலர் இருக்கிறார்கள் என்கிறார் சாணக்கியர். உங்களின் இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இதனால் பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே பண விஷயங்களில் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டியதில்லை.
ஞானத்தைப் பெறுவதில் வெட்கப்படக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் அறிவைப் பெறுவதற்கு ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. தங்களின் அனைத்து கேள்விகளுக்கும் குருவிடம் இருந்து விடை பெற, கேள்விகளைக் கேட்கத் தயங்காதவர்கள் நல்ல மாணவர்கள் என்கிறார் சாணக்கியர். ஆசிரியரிடம் கற்க வெட்கப்படும் ஒரு நபர் அல்லது மாணவர் வாழ்நாள் முழுவதும் அறியாதவராகவே இருப்பார். எனவே ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெற வெட்கப்படக்கூடாது எப்போதும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.
தோல்வியைப் பார்த்து பயப்படக்கூடாது
ஒரு வேலையை ஆரம்பித்துவிட்டால், அதனை ஒருபோதும் தோல்வி பயத்துடன் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். தோல்வியைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் போது, வெற்றி அவர்களைத் தவிர்க்கத் தொடங்குகிறது. எனவே தோல்வி பயத்தால் ஒரு நபர் ஒருபோதும் அரை மனதுடன் பணிகளைச் செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications












