Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களை செய்ய ஒருபோதும் அவமானப்படக்கூடாது... இல்லனா உங்க எதிர்காலம் அவ்வளவுதான்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மனித வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பற்றி பேசுகிறார். மனித சமுதாயத்தின் நலனுக்காகவும், மென்மையாகவும் சாணக்கியர் பல விஷயங்களை கூறியுள்ளார். இந்த விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும். அவரது கொள்கைகள் அந்த காலத்தில் மட்டுமின்றி இப்போதும் பிரபலமாக உள்ளன.

சாணக்கிய நீதியில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க பல வழிமுறைகளையும் கொள்கைகளையும் வழங்கியுள்ளார். வாழ்வின் இன்ப துன்பங்களை விவரிக்கும் பல ரகசியங்கள் சாணக்கிய நீதியில் மறைந்துள்ளன.
இந்தக் கொள்கைகளை ஒருவர் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துத் தடைகளையும் கடந்து வெற்றி பெறலாம். சாணக்கிய நீதியில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த 3 விஷயங்களை செய்ய ஒருவர் வெட்கப்படவே கூடாது என்கிறார் சாணக்கியர். இந்த செயல்களுக்காக நீங்கள் வெட்கப்பட்டால், அது எதிர்காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
சாப்பிட வெட்கப்படக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, சாப்பிட வெட்கப்படுபவர்கள் வாழ்க்கையில் பட்டினி கிடப்பார்கள். எனவே நீங்கள் சாப்பிடுவதற்கு ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. ஒரு நபர் சாப்பிட வெட்கப்படக்கூடாது. ஏனெனில் அப்படிச் செய்தால் பட்டினியால் அவர்களின் ஆரோக்கியமே கெடும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, விருந்தாளியாக ஒருவரின் வீட்டிற்குச் செல்லும் போது நீங்கள் சாப்பிடுவதற்கு கூச்சப்பட்டால், நீங்கள் நிச்சயம் பாதி வயிறுடன்தான் வர வேண்டும். எனவே எப்பொழுதும் வயிறு நிறைய சாப்பிடுங்கள், இதுபோன்ற விஷயங்களில் வெட்கப்பட வேண்டாம்.
நிதி விஷயங்களில் கூச்சப்படக்கூடாது
பணம் தொடர்பான விஷயங்களில் வெட்கப்படவே கூடாது என்கிறார் சாணக்கியர். நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பண விஷயத்தில் வெட்கப்பட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்ய வெட்கப்படுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியை அடைய மாட்டார்கள்.
கடன் கொடுத்தாலும், திரும்ப கேட்க கூச்சப்பட்டுக்கொண்டு சொந்தப் பணத்தைத் திரும்பக் கேட்க முடியாத நபர்கள் சிலர் இருக்கிறார்கள் என்கிறார் சாணக்கியர். உங்களின் இந்தப் பழக்கத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இதனால் நீங்கள் பண இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே பண விஷயங்களில் நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.
அறிவைப் பெற சங்கடப்படக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் அறிவைப் பெறுவதற்கு ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் குருவிடம் இருந்து விடை பெற, கேள்விகளைக் கேட்கத் தயங்காதவர்கள் நல்ல மாணவர்கள் என்கிறார் சாணக்கியர்.
ஆசிரியரிடம் கேள்வி கேட்கவும், கற்கவும் வெட்கப்படும் ஒரு நபர் அல்லது மாணவர் வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெற முடியாதவர்களாகவே இருப்பார்கள். எனவே ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெற தயாராக இருக்க வேண்டும் மற்றும் வெட்கப்படக்கூடாது.
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்
மற்றவர்களைப் பார்த்து எந்த வேலையும் செய்யக் கூடாது என்கிறார் சாணக்கியர். எந்த ஒரு வேலையைத் தொடங்கும் முன், தங்களின் திறமை என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் அந்த வேலையைத் தொடங்க வேண்டும்.
வேலையைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் வெற்றிபெற முடியுமா இல்லையா என்பதை மதிப்பிடுங்கள். உங்களால் ஜெயிக்க முடியும் என்று நீங்கள் உறுதியாக இருக்கும்போது மட்டுமே திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்குங்கள். திட்டமிடாமல், சிந்திக்காமல் செய்யும் பணிகள் தோல்விக்கு வழிவகுக்கும்.
தோல்வி பயம் கூடாது
ஒரு வேலையை ஆரம்பித்துவிட்டால், தோல்வியை நினைத்து பயப்பட வேண்டாம் என்கிறார் சாணக்கியர். தோல்வியைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் போதே, வெற்றி அவர்களை விட்டு தொலைவில் செல்லத் தொடங்கும். எனவே தோல்வி பயத்தால் ஒரு நபர் ஒருபோதும் அரை மனதுடன் பணிகளைச் செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications
