சாணக்கிய நீதி படி குழந்தைகள் முன் பெற்றோர்கள் இந்த 3 விஷயங்களை செய்வது அவங்க எதிர்காலத்துக்கு ஆபத்தாம்...!

Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரகளில் ஒருவரும் சிறந்த பொருளாதார நிபுணருமான சாணக்கியர் மனிதர்களின் வாழ்வியலிலும் சிறந்த அனுபவம் கொண்டவராக இருந்தார். சாணக்கியரின் அறிவுரைகள் ஒருவரின் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருப்பதுடன் அவர்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவும் உதவும்.

Chanakya Niti: Parents Should Not Make These Mistakes in Front of Children in Tamil

சாணக்கியர் தனது சாணக்கியநீதியில் வாழ்க்கை தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். பெற்றோருக்காக சில பயனுள்ள அறிவுரைகளையும் கூறியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சில விஷயங்களை எந்த சூழ்நிலையிலும் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

பெற்றோர்கள் செய்வது, சொல்வது எல்லாம் குழந்தைகளின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நடத்துவது போல, எதிர்காலத்தில் அவர்கள் தங்கள் குழந்தைகளை நடத்துவார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய சில விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

எதையும் யோசிக்காமல் பேசக்கூடாது

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குழந்தைகள் முன் அனைவரும் நன்றாக சிந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் குழந்தைகள் இளம் செடியைப் போல மென்மையானவர்கள். நீங்கள் அவற்றை வடிவமைக்கும்போது, ​​​​அவை அதன்படியே எதிர்காலத்தில் மாறும். குழந்தைகள் முன் நடந்துகொள்ளும் போது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களை சாணக்கியர் கூறியுள்ளார்.

தவறான வார்த்தைகளை பேசக்கூடாது

சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகள் முன் இழிவான வார்த்தைகளையோ அல்லது தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தக்கூடாது. இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குழந்தைகளை பண்பட்டவர்களாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு, எனவே தங்கள் பொறுப்புணர்வு அறிந்து பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் மிகவும் கண்ணியமாக பேச வேண்டும். குழந்தைகள் முன் பேசும் போது பலர் தங்கள் மானம், கண்ணியம் மற்றும் ஒழுக்கம் பற்றி நினைப்பதே இல்லை. பெற்றோர்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது.

குழந்தைகள் முன் அவதூறாகப் பேசாதீர்கள். இது குழந்தைகளின் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் பேசும்போது அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

பொய் பேசாதீர்கள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் பொய் சொல்லவோ, நாடகமாடவோ கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் அவர்களுக்கு முன்னால் பொய் சொன்னாலோ அல்லது உங்கள் பொய்களில் அவர்களையும் ஈடுபடுத்தினாலோ அவர்கள் உங்கள் மீதான மரியாதையையும், நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.

பின்னர் அவர்களும் உங்களிடம் பொய் சொல்ல ஆரம்பிக்கலாம். எனவே குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள் அல்லது அவ்வாறு செய்ய ஊக்குவிக்காதீர்கள்.

யாரையும் அவமதிக்கக்கூடாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், மற்றவர்களின் குறைகளைப் பற்றி சத்தமாகப் பேசுகிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய தவறு என்று சாணக்கியர் கூறுகிறார்.

இப்படிச் செய்வது குழந்தைளை பெற்றோரின் மீதான மரியாதையை இழக்கிறது. இதனால், குழந்தைகள் உங்களை அவமானப்படுத்தவும் மோசமாக சித்தரிக்கவும் தயங்குவதில்லை. எனவே, இதுபோன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

குழந்தைகள் கடவுளுக்கு சமமானவர்கள். எனவே குழந்தைகளை மிகுந்த அன்புடன் வளர்க்க வேண்டும். ஐந்து வயது வரை அவர்களுக்கு அனைத்தையும் அன்புடன் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்.

உங்கள் குழந்தைகள் கண்ணியமாகவும், பண்பட்டவர்களாகவும் இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் மொழியை மேம்படுத்துவதே முதல் படி. அதற்கு அவர்கள் முன் பேசும்போது நல்ல மொழியைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் முன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் குழந்தைகள் பெரியவர்கள் பேசுவதைக் கேட்டு கற்றுக்கொள்கிறார்கள். எனவே எப்பொழுதும் குழந்தைகள் முன் நன்றாக பேசவும், நன்றாக நடந்து கொள்ளவும்.

Story first published: Thursday, August 3, 2023, 7:00 [IST]
Desktop Bottom Promotion