Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
சாணக்கிய நீதி இந்த இரண்டு நபர்களிடம் கெட்ட வார்த்தை பேசுவது உங்க வாழ்க்கையில் தீராத பாவத்தை உண்டாக்குமாம்!
சாணக்கியர் வாழ்க்கையில் பொக்கிஷத்திற்கு இணையான பல போதனைகளையும் கருத்துக்களையும் போதித்துள்ளார். அவரது வார்த்தைகள் கடுமையானவை என்றாலும், அவருடைய அறிவுரைகள் எப்போதும் வாழ்க்கையில் கடினமான போர்களில் வெற்றி பெற உதவியானதாக இருக்கும்.
அவரது போதனைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, வெற்றியைப் பெறவும், சிறந்த மனிதனாக மாறவும் உங்கள் வாழ்க்கையில் அவற்றைப் புரிந்துகொண்டு பின்பற்றுவது நல்லது. ஆச்சார்யா சாணக்கியர் தனது சீடர்களுக்கு வழங்கிய அறிவுரைகளில் முக்கியமான ஒன்று நாவின் சக்தியைப் பற்றியது.

உங்கள் வாழ்க்கையில் இந்த இருவரிடமும் கெட்ட வார்த்தைகளையோ அல்லது புன்படுத்தும் வார்த்தைகளையோ பயன்படுத்தாதீர்கள், அது சாபத்தை மட்டுமே விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் கூறும் அந்த இரண்டு நபர்கள் உங்களை பெற்ற தாய் மற்றும் தந்தை. சாணக்கியரின் கூற்றுப்படி பேசும் போது, யாரிடம், என்ன பேசுகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மக்கள் அதை அடிக்கடி சிந்திக்காமல் பயன்படுத்தக் கூடாது, இல்லையெனில் பின்னர் வருத்தப்படுவீர்கள். வில்லில் இருந்து வெளிவரும் அம்பு எப்படி திரும்பப் பெற முடியாதோ, அதே போல் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளையும் திரும்பப் பெற முடியாது. அதனால்தான் பேசுவதற்கு முன், உங்களுக்கு முன்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக மக்கள் கோபமாக இருக்கும்போது, அவர்கள் கோபத்துக்கு ஆளாகும் முதல் ஆளாக இருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்கள்தான். இதுபோன்ற தருணங்களில் அவர்களின் பெற்றோர்கள் கெட்ட வார்த்தைகளுக்கு இலக்காகிறார்கள் என்பது நிஜ வாழ்க்கையில் பல நேரங்களில் நடக்கிறது. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் மிகவும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவர்கள் மனதிலிருந்து அதனை பேசுவதில்லை, ஆனால் அந்த நேரத்தில், அவர்கள் நாக்கு நல்லறிவை மீறுகிறது. இதனால் நீங்கள் கடுமையான சாபத்திற்கு ஆளாகலாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, மனிதர்கள் பேசக் கற்றுக் கொடுப்பவர்களே பெற்றோர்கள்தான் என்பதால், மனிதர்கள் தங்கள் நாக்கின் சக்தியைத் தங்கள் பெற்றோர் மீது சோதிக்கக் கூடாது என்று உபதேசிக்கிறார். கோபத்தில் குருடனாக மாறுவது துரதிர்ஷ்டத்தையே தரும். கோபம் தணிந்தவுடன், அதனால் மனவருத்தம் மட்டுமே ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாவத்திற்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால்தான், ஆச்சார்ய சாணக்கியர், உங்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்த உங்கள் பெற்றோரிடம் உங்கள் நாக்கின் சக்தியை ஒருபோதும் முயற்சிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
