Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி எந்த சூழ்நிலையிலும் உங்க பிரச்சினையை இந்த 5 நபர்களிடம் சொல்லிராதீங்க..இல்லனா கஷ்டப்படுவீங்க!
Chanakya Niti: பகிர்ந்து கொள்ளும் போது துக்கம் குறையும் என்றும், மகிழ்ச்சி பெருகும் என்றும் பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் சில துக்கங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் துக்கங்கள் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சிலரிடம் சொன்னால் உங்கள் பிரச்சனைகள் குறையாமல் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்கும். இதனால் உங்களின் மன அழுத்தமும் இரட்டிப்பாகும். இப்படிப்பட்டவர்களிடம் உங்கள் துயரங்களையும் ரகசியங்களையும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறார் சாணக்கியர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரிடமும் நண்பராக இருப்பவர்கள்
எல்லோரிடமும் நண்பராக இருப்பவர் உண்மையில் யாருக்கும் நண்பன் இல்லை என்ற பழமொழி உண்டு. அப்படிப்பட்டவர்கள் நட்பைப் பேண மற்றவர்கள் செய்யும் அனைத்தையும் ஆதரிப்பார்கள். தாங்கள் செய்வது சரியா தவறா என்று கவலைப்படாமல் எல்லோருடனும் நட்புடன் பழகவே விரும்புவார்கள்.
எனவே அப்படிப்பட்டவர்களை நம்பவே முடியாது என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்டவர்களிடம் உங்கள் துயரங்களையோ, ரகசியங்களையோ சொன்னால், அவர்கள் மற்றவர்களிடமும் சொல்வார்கள். எனவே உங்கள் கவலைகள் மற்றும் ரகசியங்களை அத்தகைய நட்பு மக்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
அனைத்தையும் கேலி செய்பவர்கள்
ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்பதன் மூலம் வாழ்க்கை சீராக செல்கிறது. ஆனால் எல்லாவற்றையும் கேலி செய்யும் நபர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து தவிர்க்க வேண்டும். எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுபவர்கள் உங்கள் பிரச்சனைகளை மேலும் கூட்டுவார்கள். அப்படிப்பட்ட ஒருவருடன் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் அவர்கள் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லி கிண்டல் செய்வார்கள். அது உங்களை மிகவும் காயப்படுத்தும்.
தங்கள் நலனில் மட்டும் அக்கறைக் கொண்டவர்கள்
சுயநலவாதிகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் துன்பங்களைத் தவிர வேறு யாருடைய துன்பங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மட்டுமே வாழ விரும்புகிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் தங்கள் சொந்த நன்மைகளைப் பார்க்கிறார்கள்.
இந்த போக்கினால் இப்படிப்பட்டவர்கள் பிறருக்குத் தீங்கு செய்யக்கூட தயங்குவதில்லை. அவர்களிடம் ஏதேனும் ரகசியங்களையோ, கவலைகளையோ சொன்னால், நீங்கள் சொல்வதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் துக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இல்லை.
பொறாமை கொண்டவர்கள்
சிலர் எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பின்மை காரணமாக, அவர்கள் உங்கள் மீது கோபமும் பொறாமையும் கொள்வார்கள். உங்களுக்கு ஏதாவது கெட்டது நடக்க வேண்டும் என்று அவர்கள் மனதிற்குள் விரும்புவார்கள்.
இவர்களிடம் உங்கள் கஷ்டங்களைச் சொன்னால், உங்களுக்குள் இருக்கும் தேவையற்ற கோபம் குறையும் என்று நீங்கள் உணரலாம். ஆனால் அது நடக்காது. அப்படிப்பட்டவர்களிடம் உங்கள் ரகசியங்களையும் துக்கங்களையும் சொன்னால், அவர்கள் உங்கள் துக்கத்தில் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிந்திக்காமல் பேசுபவர்கள்
உங்கள் வாழ்க்கையில் எப்போதும் மூச்சு விடாமல் பேசும் சிலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் எல்லோரிடமும் எப்போதும் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். பேச விஷயம் இல்லையென்றால், மற்றவர்களிடம் கடந்த காலத்தை திரித்து கதை கூறுகிறார். ஒரு நபரின் சாதாரண வார்த்தையைக் கூட திரித்து விடுகிறார்கள்.
இவற்றில் பெரும்பாலானவை பொய்யாகவே இருக்கும். அத்தகையவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த சோகத்தையோ, பிரச்சனையையோ அல்லது ரகசியத்தையோ அப்படிப்பட்டவர்களிடம் சொல்லவேண்டாம் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications












